இந்த ஒரு பொருள் வீட்டில் வைத்தால் போதும்! அதிர்ஷ்டமும், பணமும் வீடு தேடி வரும்!

- Advertisement -

சாதாரணமாக நாம் சில தெய்வத்திற்கு சொந்தமான சில பொருட்களை நம் வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கும் போது அதன் மூலம் அதிர்ஷ்டம், செல்வம், சுப காரியங்கள் என நம் வீடு தேடி வந்து தானாக நடக்க ஆரம்பித்து விடும். அதேபோல தான் இந்த உலகத்தையே பாதுகாத்து கொண்டிருக்கும் சக்தி தேவியின் பாதங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட சில பொருட்களை நம் வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது நம் வீட்டில் சந்தோசம், மகிழ்ச்சி மட்டுமே நிரம்பி வழியும். தடைப்பட்டு கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் யாவும் நடக்கும் அப்படி எந்தெந்த பொருட்களை அம்மன் பாதத்தில் இருந்து எடுத்து வைத்துவிட்டு வீட்டில் வைக்கலாம் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பூஜை, பரிகாரங்கள்

பொதுவாக நாம் வீட்டில் சில நல்ல விஷயங்கள் நடப்பதற்கு ஏற்றவாறு பூஜை பரிகாரங்கள் எல்லாம் தொடர்ந்து செய்வோம். ஆனால் ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கு குறைவாக கிடைப்பது நேரம் மட்டுமே நேரம் இல்லாமல் பூஜை பரிகாரங்கள் செய்ய இயலாதவர்கள் கூட இந்த அம்மனின் காலடியில் இருந்து எடுத்து வந்த பொருளை வீட்டில் வைத்தால் போதூம். அது ஒரு பொருள் ஒட்டுமொத்த வீட்டையும் பாதுகாக்கும். ஏனென்றால் அந்தப் பொருளில் நேர்மையான ஆற்றல்கள் நிரம்பி இருக்கும். அது உங்கள் வீட்டில் உள்ள எதிர் மறை ஆற்றல்களை வெளியேற்றி விடும். அதனுடன் சக்தி தேவியின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

மஞ்சள், குங்குமம்

பொதுவாக பல அம்மன் கோவில்களில் அம்பாளின் பாதங்களில் மஞ்சள் குங்குமம் மலை போல் கொட்டி கிடக்கும் இல்லையென்றால் சிறிதளவு அம்பாளின் பாதங்களில் தடவி வைத்திருப்பார்கள். அதேபோல சக்தி தேவியின் கால் அடியில் கிடக்கும் மஞ்சள் குங்குமத்தை பூசாரியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இப்படி நாம் வாங்கி வந்த மஞ்சள் குங்குமத்தை உங்கள் வீட்டில் வெகு நாட்களாக திருமண நடக்காத பிள்ளைகளின் ஜாதக புத்தகத்திற்குள் வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் திருமணம் ஆகாத நபர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். நீங்கள் எடுத்து வந்த மஞ்சள் குங்குமத்தை தாராளமாக பூசியும் கொள்ளலாம் நீங்கள் அடுத்தவர்களுக்கு பூசியும் விடலாம்.

தாம்பூலம்

அதேபோல் அம்பாளின் காலடியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் போன்ற பொருள்கள் அடங்கிய தாம்பூலம் வைத்திருப்பார்கள். அந்த தாம்பூல தட்டு மட்டும் உங்கள் வீட்டில் எடுத்துச் சென்று விட்டீர்கள் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி அம்பாளின் காலடியில் இருந்த இந்த தாம்பூலத்தை வாங்கி கொண்டு போய் உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து தாம்பூலத்தில் இருக்கும் வெற்றிலை எடுத்து அதனுடன் இரண்டு ஏலக்காய் வைத்து மடித்து உங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்தால். நீங்களே வேண்டாம் என்று சொன்னாலும் பணமும் செல்வமும் உங்களின் வீடு தேடி வரும்.

மஞ்சள் கயிறு

அம்மன் கோயில்களில் பலர் தங்கள் வேண்டியது நிறைவேற வேண்டும் என்பதற்காக மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அம்மன் காலடியில் வைப்பார்கள். அப்படி அம்மன் காலடியில் வைக்கப்பட்ட அந்த மஞ்சள் கயிறை வாங்கி வந்து நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி ஆண் குழந்தைகளாக இருந்தாலும் சரி அவர்களது கையில் கட்டி விட்டால் போதும். அந்த அம்பாளே அவர்களுக்கு துணையாக இருப்பாள் அவளின் அருளும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு கிடைக்கும் விடும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here