உங்கள் வருமானம் அதிகரிக்க! வீட்டில் பண வரவு அதிகரிக்க! வெறும் ஒரு ரூபாய் போதும்!

- Advertisement -

நாம் என்னதான் வருடம் முழுவதும் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் நிலையாக தங்குவது கிடையாது. நாம் பணத்தை சேர்க்க நினைத்தாலும் அந்த பணம் நம்மிடம் சேர்வதில்லை. நாம் சம்பாதிக்கும் பணத்தை விட நாம் செலவு செய்யும் பணம் அதிகமாக உள்ளது. இது மட்டும் தான் பிரச்சனை என்று பார்த்தால் இதனுடன் கடன் பிரச்சனையும் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது. அதனால் இது போன்று உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டும் விதமாக. இன்று நாம் மகாலட்சுமி வசிய பூஜை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணவிருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

-விளம்பரம்-

வெள்ளிப்பாத்திரம்

இப்படி நாம் செய்யப் போகிற மகாலட்சுமி வசிய பூஜைக்கு கண்டிப்பான முறையில் ஒரு வெள்ளி கிண்ணம், வெள்ளி தட்டு அல்லது வெள்ளி டம்பளர் போன்ற பொருட்கள் தேவைப்படும். இந்த பொருட்கள் இல்லை என்றால் வெள்ளியால் செய்யப்பட்ட எந்த பாத்திரம் இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி நாம் எடுத்துக் கொண்ட வெள்ளி பாத்திரங்கள் நிரம்பி வழியுமாறு ஒரு ரூபாய் நாணயங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். எப்படி நாம் நாணயங்களை நிரப்பிய பாத்திரத்தை உங்கள் வீட்டில் அல்லது பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் திரு உருவப்படத்தின் தாயாரின் பாதங்களுக்கு கீழே வைத்து விடுங்கள். பின்பு நீங்கள் எப்பொழுதும் போல் வீட்டில் பூஜை செய்வது போல் பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்கள் வைத்து, நெய்வேத்தியம் வைத்து, விளக்கேற்றி சாமி படங்களுக்கு தீபாரதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தீர்வு கிடைக்க

உங்கள் பூஜை அறையில் பூஜையை நிறைவு செய்து முடித்த பின். பூஜை அறையிலேயே சிறிது நேரம் அமர்ந்து உங்கள் வீட்டில் உள்ள நபர்களும், நீங்களும் பணத்தினால் படும் கஷ்டங்களையும், உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டங்கள் என அனைத்திலும் இருந்து விடுபட உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். அதன் பின்பு நீங்கள் வெள்ளி பாத்திரத்தில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களில் இருந்து உங்களுக்கு தேவையான அளவு காசை எடுத்து அதில் வாழைப்பழம் வாங்கி பசு மாட்டிற்கு சாப்பிடுவதற்கு தானம் செய்யுங்கள். இப்படி இந்த பூஜை, பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றைய தினம் செய்ய வேண்டும்.

தொழில் செய்பவர்கள்

சுயமாக தொழில் செய்பவராக அல்லது வியாபாரம் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இப்படி இந்த பூஜையை வெள்ளிககிழமை செய்து முடித்துவிட்டு வெள்ளி பாத்திரங்களில் நாம் வைத்திருக்கும் நாணயங்களை எடுத்து நீங்கள் உங்கள் தொழிலுக்கு முதலீடாக வைத்திருக்கும் பணத்துடன் நாம் வெள்ளி பாத்திரத்தில் இருந்து எடுத்த நாணயங்களையும் சேர்த்து கலந்து விடுங்கள். இப்படி நீங்கள் தொழில் செய்யும் போது நீங்கள் செய்யும் தொழிலில் உங்களால் நல்ல லாபத்தை சம்பாதிக்கவும் முடியும். நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த தொழில் லாபம் ஈட்டும் அளவிற்கு முன்னேறி வரும்.

சுப செலவுகள்

இப்படி நீங்கள் மகாலட்சுமி பாதத்திற்கு முன்பு வைத்த வெளி பாத்திரத்தில் இருந்து ஒரு ரூபாய் நாணயங்களை எடுக்க எடுக்க அதில் எடுத்த அளவிற்கு நாம் நாணயங்களை நிரப்ப வேண்டும். வெள்ளிக்கிழமையில் மட்டும் நாணயங்களை எடுத்து சுப காரியங்களுக்காகவும், அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் செலவு செய்து வர வேண்டும். இப்படி இந்த பூஜை பரிகாரத்தை தொடர்ந்து நாம் செய்தால் மகாலட்சுமி தாயாரின் முழு அருளும் நமக்கு கிடைக்கும். அதனால் வருமானமும் அதிகரித்து நம் வீட்டில் பணக்கஷ்டம், வறுமை என் இது போன்ற வார்த்தைகளுக்கு இடமே இல்லாமல் அவள் பார்த்துக் கொள்வாளா. நம்பிக்கையுடன் இதை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here