வீட்டில் பண பிரச்னையே வராது ஒரு டம்பளர் தண்ணீரில் இந்த பொருளை மட்டும் பேட்டு வையுங்கள்!

- Advertisement -

நாம் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் நிறைய உழைத்துக் கொண்டே இருக்கிறோம். அனைவரது கனவும் நிறைய பணம் சம்பாதித்து சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அப்படி சம்பாதிக்கும் பணமானது நம்மிடம் நிலைத்து நிற்பதில்லை, நம்முடைய கடின உழைப்பிற்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. அதற்கு நாம் இருக்கும் இடம் ஒரு காரணம்தான். வாஸ்து பிரச்சினையால் தான் நமக்கு இப்படி எல்லாம் நேர்கிறது.

-விளம்பரம்-

வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நம் வீட்டு சமையலறையில் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் உப்பு. அதுவும் கல் உப்பு வாஸ்து குறைபாடுகளைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அந்த கல் உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.

- Advertisement -

பணப்பற்றாக்குறை நீங்க

நீங்கள் பணப் பற்றாக்குறையை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் வாஸ்துப்படி ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்து, அதில் கல் உப்பை நிரப்பி வீட்டில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பணப்பற்றாக்குறை நீங்குவதோடு, வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும்.

வீட்டில் நிறைய பணம் சேர

நீங்கள் அதிகமாக பணம் சேர்க்க வேண்டும் என்று விரும்பினால், ஒரு கண்ணாடி பவுலில் கல் உப்பு மற்றும் அதனுடன் நான்கு கிராம்புகளை போட்டுவிட்டு வீட்டின் மூலையில் வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும், அதுமட்டுமல்லாமல் வீட்டின் சூழல் மிகவும் அமைதியாக இருக்கும்.

எதிர்மறை ஆற்றல் வெளியேற

வீட்டின் வாஸ்து குறைபாடுகள் நீங்க உங்கள் வீட்டின் குளியலறையில் கண்ணாடி டம்ளரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் குறைந்து நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். இதனை யாரும் தொடாத வகையில் வைத்து இந்த நீரை வாரம் ஒரு முறை மாற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் குறைய

உங்கள் திருமண வாழ்வில் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தால், உங்கள் படுக்கை அறையில் ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் நிறைத்து அதில் சிறிது கல் உப்பு சேர்த்து வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

குறிப்பு

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் வைக்கும் உப்பை ஸ்டீல் பாத்திரங்களில் வைத்து பயன்படுத்தக்கூடாது. எப்போதுமே உப்பை கண்ணாடி பாட்டில் அல்லது மண் பாத்திரத்தில் தான் வைத்து பயன்படுத்த வேண்டும். ஸ்டீல் பாத்திரத்தில் உப்பை வைத்து பயன்படுத்தினால், வீட்டின் அமைதி பாதிக்கப்படும்.

-விளம்பரம்-