வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் மட்டும் போது!

- Advertisement -

நம் வீட்டில் குண்டு மணி அளவிலாவது தங்கம் இருக்க வேண்டும் என்று தான் நாம் முன்னோர்கள் சொல்லி வந்தார்கள். அதே போல் நாம் அழகுக்காகவும் ஒரு முதலீடாகவும் தங்கம் வாங்குவது என்றாலும் நாம் சாதாரணமாக வாங்கிட முடியாது. அதற்கு ஸ்வர்ண லட்சுமியின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் வீட்டில் தங்கம் சேர்க்க முடியும். அதே மாதிரி பெரும்பாலானவர்கள் தங்கம் வாங்க நினைப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கு சமுதாயத்தில் அவர்களின் கௌரவத்தை நிலைநாட்ட தங்கம் வாங்கிக் கொள்வார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் எந்த ஒரு வீட்டில் குண்டு மணி அளவில் தங்கம் இருக்கிறது அந்த வீட்டில் நிரந்தரமாக, சந்தோசம், மகிழ்ச்சி, மனநிம்மதி என அனைத்தும் நிலையாக இருக்கும்.

-விளம்பரம்-

சந்தனம்

அதனால் உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் திருமணத்திற்கு நகை சேர்க்கவும், ஏதாவது ஒரு பெரிய செலவு வந்து விட்டால் போதும் நம் வீட்டில் இருக்கும் தங்க நகை அடகு வைத்து விடுவோம். அப்படி நாம் அடகு வைத்த நகையை மீட்டெடுத்து தங்கம் நிரந்தரமாக நம் வீட்டிலேயே இருப்பதற்காக செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் நாம் இன்று இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். இப்படி நாம் வீட்டில் தங்கம் சாதாரணமாக சேர்வதற்கு. நாம் வீட்டில் ஒரு பொருளை வைக்க வேண்டும். அது என்னவென்றால் அது சந்தனம் தான். சந்தனத்திற்கு இயற்கையாகவே தங்கத்தை ஈர்க்ககக்கூடிய சக்தி உள்ளது.

- Advertisement -

சந்தன கட்டை

அப்படி இந்த சந்தன கட்டையை வைத்து என்ன செய்வது என்று கேள்வி எழுகிறதா ? நீங்கள் ஒரு சுத்தமான ஒரிஜினல் சந்தன கட்டையை வாங்கி கொள்ளுங்கள். பின்பு அந்த சந்தனக்கட்டையை இழைத்து அதிலிருந்து கிடைக்கும் சந்தன மரத்துகள்களை பெண்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இவ்வாறு இழைத்து வைத்திருக்கும் சந்தனத்தை பன்னீரில் கலந்து வீட்டில் நாம் வைத்திருக்கும் சாமி படங்களுக்கு சந்தன பொட்டு வைத்து அதன் மேல் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பீரோவில் வையுங்கள்

அது மட்டும் இல்லாமல் கடைகளில் வாங்கும் போது சின்ன சின்ன சந்தன கட்டை துண்டுகளாக சிறிது வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி நாம் வாங்கிய அந்த சிறிய சந்தன கட்டை துண்டுகளை ஒன்று பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் அல்லது வீட்டில் பணம் வைத்து எடுக்கும் பணப்பெட்டிகள் எந்த இடங்களிலும் சந்தன கட்டைகள் ஒன்று போட்டு வைக்கலாம். மேலும் நீங்கள் தங்க நகைகள் வைக்கும் இடத்தில் தங்க நகையுடன் படுமாறு சந்தனக்கட்டையை போட்டு வைக்கலாம். நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் கல்லாப்பெட்டியில் ஒரு சந்தனக்கட்டை போட்டு வைக்கலாம். தங்கம் இல்லாதவர்கள் கூட அவர்கள் வீட்டு பீரோவில் இந்த சந்தனக்கட்டையை போட்டு வைத்தால் சிறிது நாட்களில் தங்கம் வாங்கக்கூடிய யோகம் கூடி வரும்.

அடகு நகை

அதன் பின் நீங்கள் அடகு வைத்த தங்க நகை மீட்க வேண்டும் என்று விரும்புகீறீர்களா. நீங்கள் தங்க நகைகளை அடமானத்துக்கு வைக்கும் போது ரசீது கொடுத்திருப்பார்கள் அல்வா. அந்த ரசீதுக்கு நடுவில் சந்தன கட்டையை வையுங்கள் சீக்கிரமாகவே நீங்கள் அடகுமானத்திற்கு வைத்த நகையே மீட்டு எடுத்து வரலாம். அந்த நகை மீண்டும் கூட அடமானத்திற்கு செல்லாமல் இருக்கும். அப்படி நீங்கள் அடமானத்தில் வைத்த நகையே மீட்டு எடுத்தபின் மீதம் இருக்கும் தங்க நகையுடன் வைத்து விடாதீர்கள். அடமானத்திலிருந்து மீட்டு வந்த தங்க நகையை முதலில் மஞ்சள் தண்ணீரில் முக்கி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் சந்தனம் கலந்த தண்ணீரில் கொஞ்சம் நனைத்து. உங்கள் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு சிறிது நேரம் அதை தங்க நகை போட்டு வைத்துவிட்டு அதன் பின் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

நினைவில் வையுங்கள்

இப்படி நீங்கள் உங்கள் வீட்டில் சந்தனத்தினால் செய்யப்பட்ட பொருள், சந்தன கட்டைகள், சந்தனத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் தங்க நகைகள் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதேபோல் அடகு நகைகளை மீட்பதற்கும், மீட்ட அடகு நகைகளை மற்ற தங்க நகைகளுடன் சேர்த்து வைப்பதற்கு முன்பாகவும் மேலே சொன்ன பரிகாரங்களை நினைவில் வைத்து கொண்டு இதுபோல் செய்து பாருங்கள் இதனால் தங்கத்தின் மீது தோஷம் இருந்தால் கூட அது நீங்கிவிடும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here