குறைவில்லா பண வரவு வீட்டில் இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள்கள் இருந்தால் மட்டும் போதும்!

- Advertisement -

ஒரு மனிதனுக்கு இன்றைய நாட்களில் பெருமளவில் முக்கியமாக தேவைப்படுவது பணம் மட்டுமே அந்த பணத்திற்காக தான் ஏன் ஒடுகிறோம் ? எதற்காக ஓடுகிறோம் ? என்பது கூட தெரியாமலே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாமும் என்னதான் கடவுளிடம் பல பிரார்த்தனைகள் செய்தாலும் அதில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் முக்கால்வாசி பணம் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகளாகவே இருக்கும். அதனால் இன்று நான் உங்களுக்கு பண வரவு என்பது குறைவே இல்லாமல் வந்து கொண்டே இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பு தெளிவாக காண உள்ளோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

-விளம்பரம்-

கிரகங்களின் பாதிப்பு

நாம் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணம் நம்மிடம் சேரவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் கிரகங்களின் பாதிப்பாக மட்டும் இருக்கும். அதிலும் நமக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகங்கள் என்றால் ராகு, கேது மற்றும் சனி பகவான் இவர்கள் தான். இந்த மூன்று கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இருந்தால் கூட எண்ணில் அடங்காத கஷ்டங்களை நாம் அனுபவிப்போம். இந்த கிரகங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு விநாயகர் பெருமானை ஒரே வழி என சாஸ்திரங்கள் சொல்கின்றனர்.

- Advertisement -

தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி

ஆம் நாம் பொதுவாகவே எந்த ஒரு காரியங்களை செய்தாலும் அல்லது புதியதாக எதை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வேண்டிக்கொண்டு அதன் பின்பு தான் அந்த செயலையும் அந்த தொடக்கத்தையே நாம் தொடங்குவோம். ஏனென்றால் நாம் புதியதாக கையில் எடுக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் அந்த காரியம் நடைபெற வேண்டும். அதேபோல் தான் ராகு கேது மற்றும் சனி பகவானால் நமக்கு ஏற்படக்கூடிய இன்னல்ளும், துன்பங்களும் விலகுவதற்கு விநாயகர் பெருமான் நமக்கு அருள் புரிவார்.

சங்கடஹர சதுர்ததி

அப்படி விநாயகர் பெருமான் நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு அவரை வழிபட சிறப்பாக இருக்கக்கூடிய நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த இந்த சங்கடஹர சதுர்த்தி என்ற பெயரிலேயே சங்கடங்களை அகற்றுவது என்ற பொருள் உள்ளது இந்த சங்கடஹர சதுர்த்தியில் நாம் விநாயகரை வேண்டி விரதம் இருந்து விநாயகர் பெருமானே வழிபடுவதன் மூலம் நம்முடைய சங்கடங்களை மட்டும் அவர் தவிர்க்காமல் நமக்கு சகல செல்வங்களையும் குறைவில்லாத பணவரவையும் தந்து அருள் புரிவார்.

விரதம்

இதில் உங்களுக்கு குறைவில்லாத பண வரவை ஏற்படுத்தி தருவதற்காக சங்கடஹர சதுர்த்தி அன்று நீங்கள் மாலையில் ஒரு வேலையாவது விரதம் இருந்து பின் அருகம்புல்லையும், அதனுடன் மிளகையும் சேர்த்து இடித்து. பின் இடித்த அருகபுல்லில் இருந்து சாறு பிழிந்து அந்த சாரை விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஒரு அகல் விளக்கு தீபம் ஏற்று “ஓம் கம் கணபதியே நமஹே” என்ற மந்திரத்தை 21 முறை அல்லது 33 முறை சொல்லி மனம் உருகி நீங்கள் விநாயகரை வழிபடும் பொழுது பணம் உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

பிரசாதமாக கொடுங்கள்

இப்படி விநாயகரை வழிபட்டு நம்முடைய விரதத்தை முடித்த பின் நம் விநாயகருக்கு நெய் வைத்தியமாக வைத்த அருகம்புல் சாறை பிரசாதமாக நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் குடிக்க வேண்டும். இவ்வாறு நாம் விநாயகரை வழிபடும்போது உங்களது சங்கடங்களும் தீர்ந்து உங்களுக்கு வற்றாத அளவிற்கு பணவரவு இருந்து கொண்டே இருக்கும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் முழு நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக செய்யும்போது அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அது போலத்தான் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கும் கிடைக்கும்.