இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற சீரக குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த சீரக குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் நிறைவாக சாப்பிட்டு முடிக்கலாம். இது போன்ற நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு.
இதையும் படியுங்கள் : மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?
இந்த சீரக குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். அடுத்தமுறை உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த மணமணக்கும் சீரக குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையில் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சீரக குழம்பு | Seeraga Kulambu Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 tbsp சீரகம்
- 1 கப் புளி கரைசல் எலுமிச்சை அளவு புளி கரைத்தது
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 6 பல் பூண்டு
- 1 tsp சாம்பார் தூள்
- ¼ tsp மஞ்சள் தூள்
- 1 tsp வெல்லம்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- 2 tbsp எண்ணெய்
- 1 tsp கடுகு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 tsp வெந்தயம்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
- புளியை ஒரு கப் நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி, பூண்டுப்பல்லைத் தோல் உரித்தும் வைத்துக் கொள்ளுங்கள்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். இதில் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள். சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்த்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள்.
- பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.
- ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.