பணம் இல்லை என்ற வார்த்தையே உங்களிடம் இருந்து வராது! இந்த ஒரு விளக்கு போதும்!

- Advertisement -

நமக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் ஏன் நாம் கூட சில நேரங்களில் நிம்மதி இல்லை, தூக்கம் இல்லை, சந்தோஷம் இல்லை, பணம் இல்லை என இல்லை இல்லை என்ற வார்த்தைகளை சொல்லி அடுத்தவர்களிடம் நிறைய புழம்பி கொண்டு இருந்திருப்போம். ஆனால் முதலில் நாம் இல்லை என்ற இந்த வார்த்தையவை பயன்படுத்தவே கூடாது. நாம் எப்போதும் இல்லை என்ற இந்த வார்த்தையை பயன்படுத்திக் கொண்டே இருந்தால் நம்மிடம் இருப்பது கூட இல்லாமல் போய்விடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். அதனால் அது பணமாக இருந்தாலும் சரி பொருட்களாக இருந்தாலும் சரி இல்லை என்று சொல்லாமல் குறைவாக உள்ளது என்று சொல்லுங்கள் எல்லாமே என்னிடம் இருக்கு என்று மனநிறைவுடன் வாழுங்கள் எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். அதனால் நாம் இன்று இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நம்மிடம் இல்லாத பணம், நிம்மதி, தூக்கம் போன்றவை எப்படி நம்ம வசமாக்குவது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்

-விளம்பரம்-

செம்பருத்தி இலை தீபம்

நாம் ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சில தாந்திரீக பரிகாரங்களை சரியான முறையில் செய்து கடவுளை வழிபட்டு வரும்போது நமக்கு வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த தாந்திரீக பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். நாம் இன்று பார்க்க இருக்கிறது செம்பருத்தி இலை தீப பரிகாரம் அதனால் நாம் இந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக செம்பருத்தி இலை தீப பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த செம்பருத்தி இலை தீபத்தை நீங்கள் வாரத்தில் ஒரு நாட்கள் அதாவது திங்கள், செவ்வாய், வெள்ளி என உங்களுக்கு எந்த நாட்களில் நேரம் கிடைக்குதோ அந்த நாட்களை தேர்ந்தெடுத்து செய்து வரலாம்.

- Advertisement -

பரிகாரம்

முதலில் இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்வதற்கு ஒரு முழுமையான செம்பருத்தி இலையை எடுத்துக்கொண்டு அதற்கு மேல் சிறிது தேங்காய் எண்ணெயை தடவி கொள்ளுங்கள். பின் அதற்கு மேல் ஒரு மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெள்ளை நிற பஞ்சு திரி விளக்கு போட்டு விளக்கேற்றி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இப்படி இந்த விளக்கு ஏற்றிவிட்டு உங்கள் வீட்டில் நீங்கள் வழக்கம் போல் ஏற்றும் விளக்குகளையும் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நம் ஏற்றிய செம்பருத்தி இலை தீபத்திற்கு முன்பு அமர்ந்து உங்களின் குல தெய்வத்தை மனதார நினைத்து உங்கள் வீட்டில் நீங்கள் இல்லை என்று நினைக்கிற இதெல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென உங்கள் குலதெய்வத்திடம் மனம் உருகி வாரங்களாக கேளுங்கள்.

எண்ணெய் தீரும் வரை

நீங்கள் உங்கள் குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு உங்கள் குலதெய்வத்தின் படத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து நீங்கள் செய்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றிய செம்பருத்தி தீபத்தை குளிர வைக்க வேண்டாம். முழுவதுமாக எண்ணெய் தீரும் வரை அந்த விளக்கு ஏறிய விடுங்கள். பிறகு மறுநாள் விளக்கு முழுவதுமாக ஏறிந்து அனைந்ததும். விளக்கிற்கு கீழ் வைத்திருந்த செம்பருத்தி இலையை மனிதனின் காலடிகள் படாத இடங்களில் போட்டுவிட்டு நீங்கள் ஏற்றி வைத்த விளக்கே சுத்தம் செய்து கொள்ளுங்கள். இப்படி அடுத்த வாரம் மறுபடியும் புதியதாக செம்பருத்தி இலையை வைத்து தேங்காய் எண்ணெய் தடவி அதன் மேல் அதை அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும்

வாரம் ஒரு முறை இந்த விளக்கு ஏற்றி வைத்து அதன் முன் அமர்ந்து உங்கள் குலதெய்வத்தை நினைத்து நீங்கள் கேட்கக் கூடிய வரங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து உங்களை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக நாம் ஏற்றிய அகல் விளக்கு உங்களுக்கு குலதெய்வத்தையே உங்கள் வீட்டிற்குள் அழைத்து வரும் அதனால் உங்களுக்கு அல்ல அல்ல குறையாத செல்வம் வேண்டுமா, மனம் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டுமா, நிம்மதியான தூக்கம் வேண்டுமா, கணவன் மனைவிக்குள் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமா, குழந்தைகள் பெற்றோர்களின் சொல் கேட்டு வளர வேண்டுமா, இப்படி என்ன குறைகளாக இருந்தாலும் இந்த ஒரு விளக்கு ஏற்றி நீங்கள் வழிபடும் போது உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் சக்தி இந்த செம்பருத்தி இலை பரிகாரத்திற்கு உண்டு.

-விளம்பரம்-

வீட்டில் அனுகிரகம் கிடைக்க

ஒரு சிலருடைய வீட்டில் எப்போதுமே வறுமையான சூழ்நிலையே நிலவிக் கொண்டிருக்கும். அவர்கள் வீடு இருண்டடைந்த நிலையில் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் வீடுகளில் நாம் தெய்வத்தின் அனுக்கிரகமே இல்லை என்று பலர் சொல்வார்கள் இப்படிப்பட்டவர்களும் வாரம் ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த செம்பருத்தி இலை தீப தாந்திரீக பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் வீட்டில் உள்ள இருள் நீங்கி உங்கள் வீட்டிற்கு ஒரு ஔி கிடைக்கும். இதை நீங்கள் சிறிது நாட்களிலே உணர ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here