தற்போதைய நாட்களில் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் மிகப்பெரிய ஆசையே நாமும் என்றாவது ஒரு நாள் பணக்காரனாக மாறிவிட மாட்டோமா என்ற ஆசையாக தான் இருக்கும். அதற்காக தான் இன்றைய நாட்களில் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக செல்லும் இந்த உலகத்தில் நாமும் வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். நம் கையில் பணம் இருந்தால் மட்டும் தான் இந்த சமுதாயத்தில் நம்மால் வாழ முடியும், இந்த சமுதாயத்தில் நாம் ஒரு சக மனிதனாக நின்று பேச முடியும் அந்த அளவிற்கு இன்றைய மனிதனின் வாழ்வில் பணம் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
பரிகாரம்
கையில் பணம் இல்லாமல் ஒரு நாள் கூட இந்த உலகத்தில் நம்மால் வாழ முடியாது என்ற அளவிற்கு இந்த உலகம் இப்போது வந்து விட்டது. இப்படி அனைவரும் சம்பாதிக்க நினைக்கும் இந்த பணத்தை சேர்ப்பது அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பது தான் பதில். நாம் என்றைக்கு பணத்தை வெறுக்காமல் அதை அலட்சியமாக நினைக்காமல் அந்த பணத்தை விரும்புகிற போது தான் அந்த பணம் தானாக நம் கையில் வந்து சேரும். அப்படி அந்த பணமே நம்மை விரும்பி நம் கைகளில் வந்து சேர்வதற்கு உண்டான ஒரு ஆன்மீக ரீதியான பரிகாரத்தை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காண உள்ளோம் வாருங்கள் பதவிற்குமள் சொல்லலாம்.
ஆறு ஒரு ரூபாய் நாணயம்
இப்படி பணம் நம் கையில் சேருவதற்காக செய்யும் இந்த ஆன்மீக பரிகாரத்தை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை தினம் உகந்த தினமாக இருக்கும். இந்த செவ்வாய்க்கிழமை தினத்தில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்காக முதலில் ஒரு மஞ்சள் துணியை எடுத்து கொண்டு முருகப்பெருமானை மனதார நினைத்து அவரை மனம் உருகி வேண்டி நாம் வைத்திருக்கும் துணியில் ஒரு ரூபாய் நாணயம் என ஆறு நாணயங்களை வைத்து முடிச்சு போட்டு அந்த முடிச்சை நீங்கள் பணம் வைத்திருக்கும் பணப்பெட்டி அல்லது பீரோவில் பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.
பணம் பெருகும்
இப்படி இந்த பரிகாரத்தை செய்து நீங்கள் இந்த முடிச்சை பணம் வைக்கும் இடத்தில் வைக்கும் போது அந்த இடத்தில் நீங்கள் ஆறு ரூபாய் நாணயத்தை வைப்பீர்கள். ஆனால் அந்த ஆறு ரூபாய் நாணயம் அடுத்து வரும் நாட்களில் ரூ. 60 ரூபாய் ஆகும். அந்த 60 ரூபாய் 600 ரூபாய் ஆகும். அந்த 600 ரூபாய் 60 ஆயிரம் ரூபாய் ஆகும். அந்த 60 ஆயிரம் ரூபாய் 6 லட்சம் என பல மடங்காக பெருகிக்கொண்டே செல்லும். இதனால் உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். இப்படி இது போன்ற பணம் சார்ந்த விஷயங்களை நீங்கள் செய்யும் போது செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் செய்து விடுவது நல்லது.
பண விஷயங்களை இந்த நேரத்தில் செய்வது நல்லது
அதாவது நான் மேலே சொன்ன கிழமைகளில் அந்த நேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் பணம் போட வேண்டிய பணத்தை இந்த நேரத்தில் போடலாம். நீங்கள் வீட்டில் நல்ல காரியங்களுக்காக சீட்டு போட்டு பணம் சேமிக்கும் போது அந்த சீட்டு பணத்தை கொடுப்பதற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை போன்று நீங்கள் யாரிடமாவது இருந்து கடன் பெற்று இருப்பீர்கள் அந்த கடனை திருப்பிக் கொடுக்கும் போதும் இந்த நேரத்தில் திருப்பி கொடுத்தால் உங்களுக்கு இருக்கும் பணம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் குறைந்து உங்களுக்கு அனைத்தும் நல்ல விஷயங்களை நடக்கும். உங்கள் வீட்டில் பண சேமிப்பு என்பது அதிகரித்து சுப செலவுகள் நடக்கும். அதனால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.