உங்களின் ஒட்டு மொத்த பண கஷ்டமும் தீர வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

இந்த உலகில் பணக்கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் பணம் கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த பணத்தின் மதிப்பு தான் சற்று கூட குறைய இருக்குமே தவிர அனைவருக்கும் பணக்கஷ்டம் இருக்கும். சிலர் இது போன்ற பண கஷ்டங்களில் இருந்து இறுதியில் மீண்டு வந்து விடுவார்கள். சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி போய் விடுவார்கள். ஆனால் நமக்கு ஏற்படும் பணக்கஷ்டங்களை நாம் ஆன்மிக ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதனை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பணகஷ்டம் தீர

நாம் வீட்டில் ஏற்றும் தீபத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என சாஸ்திரங்கள், ஐதீகங்கள் நமக்கு கூறுகின்றனர். அதனால் உங்கள் வீட்டில் இருந்து தீபத்தை மற்றொரு வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. இது உங்கள் வீட்டில் இருக்கும் செல்வங்களை நீங்களே வெளியேற்றுவதாக அமையும்.

- Advertisement -
Nataraja Temple , Chidambaram. | Cuddalore District, Government of  Tamilnadu | Sugar bowl of Tamil Nadu | India

உள்ள பணக்கஷ்டம் தீர்வதற்கு சிதம்பரம் நடராஜரை சென்று தரிசித்து வாருங்கள். உங்கள் வீட்டில் தேவாரப் பாடல்களை படித்து வாருங்கள். இதுபோன்று செய்யும்போது உங்கள் வீட்டில் உள்ள பண கஷ்டத்தை நீக்கி பணவரவை அதிகரிக்கும்.

குத்து விளக்கு ஏற்றுவதன் நன்மைகள்

நம்மிடம் இருக்கும் பணம், சொத்துக்கள், செல்வங்கள், ஐஸ்வர்யங்கள் என சகலத்திற்கும் சொந்தக்காரி மகா லட்சுமி தேவி ஆவார். லட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டுமே நம்மால் பணக்கஷ்டத்தில் இருந்து மீண்டு வர முடியும் ஆகையால் நம் வீட்டில் இருக்கும் குத்து விளக்கு ஏற்றும் போது அதில் லட்சுமி வந்து வாசம் செய்வாள் எத்தனை முகங்கள் கொண்ட குத்து விளக்கு ஏற்றுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியும்.

Reporter's Diary: When kuthu vilakku turns high-tech || Reporter's Diary:  When kuthu vilakku turns high-tech

ஒரு முகம் இருக்கும் – குத்து விளக்கு ஏற்றினால் மத்தித பலன் உங்களுக்கு தரும்.

-விளம்பரம்-

இரண்டு முகம் இருக்கும் – குத்து விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் இருப்பவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை வலுப்பெறும்.

மூன்று முகம் இருக்கும் – குத்து விளக்கு ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நான்கு முகம் இருக்கும் – குத்து விளக்கு ஏற்றும் போது கால்நடை சம்பந்தமான செல்வங்கள் பெருகும்.

-விளம்பரம்-

ஐந்து முகம் இருக்கும் – குத்து விளக்கை ஏற்றினால் எட்டு விதமான செல்வங்களும் உங்கள் வீட்டில் பெருகும்.

திருவாடுதுறை

நீங்கள் சொந்தமாக தொழிலில் செய்யும் இடம் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரவில்லை என்றால் கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக்கும் இடையே உள்ள திருவாடுதுறை சென்று அங்கு உள்ள கோமதீஸ்வரரை முறைப்படி வழங்கினால். உங்களது வீட்டில் உள்ள பணக்கஷ்டம் தீர்ந்து செல்வம் வளம் அதிகரிக்கும்.

Benefits of Chanting Sri Mahalakshmi Ashtakam

வெள்ளி ராகு கால பூஜை

வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜையை தொடர்ந்து 15 வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை வேண்டி மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் போன்ற பூக்களில் ஏதாவது ஒரு பூவை வைத்து அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல், வெள்ளை மொச்சையை பிரசாதமாக செய்து பூஜை செய்து வந்தால் உங்களுக்கு தேவையான புகழ், செல்வம், வியாபார விருத்தி, குழந்தை பாக்கியம் குடும்ப ஒற்றுமை என அனைத்தும் கிடைக்கும் இது மிகவும் சக்தி வாய்ந்த பூஜை செய்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here