உங்கள் கையில் இருந்து சென்று பணம் மீண்டும் தானகவே கைக்கு வர வேண்டுமா ? அதற்கு மூன்று சோழி இருந்தால் போதும்!

- Advertisement -

இந்த உலகில் நாம் அனைவரும் ஒரே விஷயத்திற்காக நான் ஓடி கொண்டிருக்கிறோம் அது பணம் மட்டுமே. நம் வாழ்வை சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் அதற்கு பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த பணத்தை நாம் சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ அதை போல பாதுகாப்பதற்கும் பல கஷ்டங்கள் பட வேண்டும். உதாரணமாக நம்மிடம் யாராவது கஷ்டப்படும் நேரத்தில் பணம் கேட்பார்கள் நாமும் சந்தோஷமாக பணம் கொடுத்து உதவுவோம். ஆனால் இது போன்ற பணங்கள் நம்மிடம் திரும்பி வரவே வராமல் கூட போய்விடும். இது போன்று நாம் இழந்த பணங்களை திருப்பி நம் கைக்கு தானாகவே வந்து சேர்வதற்கு ஆன்மீகத்தில் சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இந்த சோழி பரிகாரம். இதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பரிகாரம் செய்யும் காரணம்

இந்த பரிகாரத்தை என்னென்ன காரணங்களுக்காக செய்யலாம் என்று பார்த்தால் நாம் நம்முடைய கஷ்டகாலத்தில் நமக்கு பணம் தேவைப்படும் பொழுது யாரிடமாவது பணம் கேட்டிருப்போம் அவர்களும் பணம் தரேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் இப்படி நமக்கு வர வேண்டிய பணம் வராமல் தடைப்பட்டுக் கொண்டிருப்பதற்காக இந்த பரிகாரம் செய்யலாம். மேலும் நாம் முதலில் பார்த்தது போல் நாம் யாருக்காவது பணம் கொடுத்து அந்த பணம் மீண்டும் வராமல் இருக்கும்போது அந்த பணம் மீண்டும் நாம் கைக்கு வந்து சேர வேண்டும் என்றாலும் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

சோழி பரிகாரம்

இந்த சோழி பரிகாரத்தை செய்வதற்காக நமக்கு நல்ல நிலையில் இருக்கும் மூன்று சோழிகள் தேவைப்படும் மூன்று சோழிகள் எடுத்துக்கொண்டு இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்குள் எந்த நேரத்தில், எப்பொழுதும் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் நீங்கள் இந்த பரிகாரத்தை பூஜை அறையில் வைத்து மட்டுமே செய்ய வேண்டும். இதுவே இந்த பரிகாரம் செய்ய நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை, சரி வாருங்கள் இந்த பரிகாரம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

பரிகாரம் செய்முறை

நாம் கஷ்டப்பட்டு வேலை பார்த்து சம்பாதித்து இழந்த பணத்தை மீண்டும் நாம் கைக்கே கொண்டு வர செய்யும் இந்த சக்தி வாய்ந்த சோழி பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்வதற்காக முதலில் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு. நீங்கள் எப்பொழுதும் பூஜை அறையில் தயார்படுத்துவது போல் தயார் படுத்திக் கொண்டு பூஜை அறையில் ஏற்றிய தீபத்தின் முன்பு அமர்ந்து கொள்ளுங்கள் பின்பு நான் வைத்திருக்கும் மூன்று சோழியை கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு வரவேண்டிய பணத்தைப் பற்றி மனதார நினைத்து “ஓம் கீரீம் பத் சுவாகா” என்று இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

இப்படி நீங்கள் உச்சரிக்கும் இந்த மந்திரத்தை 441 முறை சொல்ல வேண்டும். நீங்கள் இந்த எண்ணிக்கையில் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக மட்டுமே இந்த மந்திரத்தை காண முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த கணக்கை நீங்கள் சரியாக வைத்துக் கொள்வதற்காக. நீங்கள் வீட்டில் இருக்கும் சுண்டல் அல்லது மொச்சை போன்ற ஏதாவது ஒரு தானியங்களை 441 என்ற கணக்கில் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து மந்திரத்தை சொல்லும்போது ஒன்று ஒன்றாக எடுத்து வைக்கும் போது உங்கள் கணக்கு சரியாக இருக்கும்.

-விளம்பரம்-

சிரமம் பார்க்காமல் செய்யும்

அவசியம் 441 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது அவசியமா என்று கேட்டால் கண்டிப்பாக ஆம் நீங்கள் இத்தனை முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது தான் அதன் பலம் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும் சற்று சிரமமாகத்தான் இருக்கும் இருந்தாலும் நீங்கள் மனம் தளராமல் இந்த பரிகாரத்தை சரியான முறையில் சிரமம் பார்க்காமல் செய்தால் கண்டிப்பாக நீங்கள் இழந்த பணம் மீண்டும் தானாகவே உங்கள் கைக்கு வந்து சேரும். எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்தால் அதற்கு உண்டான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்பார்கள். அதனால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here