- Advertisement -
வேலைக்காக குடும்பத்தையோ, குடும்பத்துக்காக வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை. இவற்றில் இருந்து விடுபட ஆன்மிகத்தில் சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.மன அழுத்தம் இல்லாத நிம்மதியான, அமைதியான வாழ்க்கையை பெற தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
-விளம்பரம்-
மன அழுத்தம் குறைய 10 வழிகள்:

- 1. கடவுள் பாடல்கள் கேட்பதால் நம்முடைய மனம் நிம்மதியடையும், மன அழுத்தம் குறையும், மேலும் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். இசை மனநிலையை மேம்படுத்துவதோடு, வலி மற்றும் பதட்டத்தையும் குறைக்கும். இது, கடவுள் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தி, அவரை நெருங்க வைக்கவும் வழிவகுக்கும். அதனால் தந்தை சிவபெருமானைப் பற்றி மகிழ்ச்சியாக ஒலிக்கும் பாடல்களைக் கேளுங்கள்.
- 2. அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக இருந்தால் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சக நபரால் ஏற்படும் போட்டி, மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் சொல் சிலசமயம் நம்மளை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். அந்த சமயத்தில் மனதில் இறைவனை நினைத்து அந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள்.
- 3. மனதில் உள்ள விஷயங்களை யாருடன் பகிர்ந்து கொள்ளாமல் நம்முடனே வைத்திருந்தால் டென்ஷன் தான் அதிகரிக்கும். அந்த சமயத்தில் எதற்கும் கவலைப்படாமல் எல்லா பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக சூழ்நிலையை கடந்து செல்லுங்கள்.
- 4. மனதிற்கு அமைதியான இசையை கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும். அதனால் உங்களிடம் யாராவது கோபம் வரும்படி பேசினால் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டு மனதிற்கு அமைதியை தரும் இசையை கேளுங்கள்.
- 5.சூழ்நிலையை அன்புடன் எதிர்கொள்வதே மனிதனின் உயர்தன்மை. எல்லாம் சிறிது கால நேர ஆட்டம் தான் என்பதை புரிந்து கொண்டு அந்த ஆட்டத்தை அன்புடன் நிறைவு செய்யுங்கள்.
- 6. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடமே. எதிர்பார்த்தது நடந்தால் அது நமக்கு நன்றாக தெரியும், நடக்கவில்லை என்றாலும் கவலை வேண்டாம். அதுவும் நன்மைக்குத் தான்
காலம் கடந்து சென்ற பிறகு அதன் அர்த்தம் புரியும். அதனால் எல்லாவற்றும் நன்மையே என்று ஆனந்தம் கொள்ளுங்கள். முடிந்த வரை மௌனமாக இருக்க பழகுங்கள். தேவையான இடத்தில் மட்டும் பேசும் பழக்கத்தை வழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். - 7. அன்பே இறைவனின் வடிவம். எங்கு ஆங்காரம், கோபம், பொய், வஞ்சகம், பழிவாங்கும் எண்ணங்கள், தற்புகழ்ச்சி, பொறாமை, குற்றப் பார்வை – இவையெல்லாம் இருக்கிறதோ அங்கே இறைவன் தங்க மாட்டார். அதனால் தர்மத்துக்கு மாறான எண்ணங்கள்,
மற்றவரின் தவறுக்குப் பதிலாக நாமும் தவறு செய்வது, இதையெல்லாம் தவிர்த்து விட்டு அன்பின் வழியை தேர்ந்தெடுங்கள். - 8. மௌனம் என்பது வெறும் அமைதி அல்ல – அது ஆனந்தத்தின் மொழி. அதனால் கஷ்டமான சூழ்நிலையில் மௌனமாக இருங்கள். உங்களை கோபமடையச் செய்யும் நபரிடமும் நீங்கள் சாந்தமாக இருந்தால், அது மற்றவரின் கோபத்தை தணிக்கும். ஆன்மீகத்தின் வெளிப்பாடு எப்பேற்பட்டவரையும் அமைதி அடைய செய்துவிடும்.
- 9. விரும்பியது கிடைக்காமல் போனால் ஏமாற்றம், வெறுத்தது நம்மை வந்தடைந்தால் சங்கடம். ஆகவே, எந்தவொரு விஷயத்தையும் கடுமையாக விரும்பாதீர்கள், கடுமையாக வெறுப்பும் காட்டாதீர்கள். அனைத்து விஷயங்களிலும் சமமான மற்றும் நிலையான அன்பை வையுங்கள்.
- 10. இறைவனின் நினைவே நிம்மதியின் நிழல் அதனால் இறைவனின் புகழை மனதில் புகழ்ந்து கொண்டே இருங்கள். அவர் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது, அவர் இல்லாமல் ஒரு ஓசையும் ஒலிக்காது. அதனால் வாழ்வில் அவரை துணையாகக் கொள்ளுங்கள். அவர் உங்கள் பக்கம் இருந்தால், உங்களின் கவலையை அவர் தாங்கிக்கொள்வார்.
இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டத்தை தீர்க்கக் கூடிய மூன்று பொருட்கள்!!
- Advertisement -