நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3:17 மணியளவில் சந்திர பகவான் ரிஷப ராசிக்குள் நுழைய போகிறார். நவம்பர் 18 ஆம் தேதி வருகையில் ரிஷப ராசியில் தான் சந்திர பகவான் இருப்பார் எனவே சந்திர பகவான் தங்கும் அதே நேரத்தில் குரு பகவானும் ரிஷப ராசியில் இருப்பார். எனவே இதனால் கஜகேசரி யோகம் உருவாகும் இந்த யோகத்தால் நான்கு ராசிக்காரர்களுக்கு குறுகிய காலகட்டத்தில் பல நன்மைகள் கிடைக்கும் அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டு கிரகங்களும் இணைவதால் உருவாகக்கூடிய இந்த யோகத்தினால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகளை கிடைக்கும் அதிக லாபமும் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல நிலை இருக்கும். எதிர்காலத்திற்கு பயனளிக்க கூடிய புத்தம் புதிய வாய்ப்புகளும் உருவாகும். உடல் நலமும் ஆரோக்கியமாகவே இருக்கும்.
கடக ராசி

கடக ராசிக்கு இந்த கஜகேசரி யோகத்தினால் லாபம் அதிகமாக பெருகும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் புதிய வேலையை தொடங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தால் அதனை இந்த நேரத்தில் தொடங்குங்கள் எனவே நல்ல பலனும் கிடைக்கும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்து இருந்த புதிய வேலை கிட்டும்.இதனால் புதிய வருவாயும் உண்டாகும், பொருளாதார நிலையும் வலுவாகும். வேலை பார்க்கும் இடத்தில் சம்பளமும் உயரும். பாதியில் நின்ற விஷயங்கள் உங்களுக்கு முழுமையாக முடிவடையும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு வேலை பார்க்கக் கூடிய இடத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை உயரும் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து குடும்ப உறவுகள் வலிமை பெறும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல வருமானம் எதிர்காலத்தில் கிடைப்பதற்கான முதலீட்டை இப்பொழுது நீங்கள் செய்வீர்கள் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியால் கஷ்டங்களுக்கு உள்ளாகப் போகும் சில ராசிகள்!


