சமையல் அறையில் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் பணவரவு என்பது என்றென்றைக்கும் அதிகரித்துக் கொண்டே இருக்குமாம்!

- Advertisement -

பணம் பத்தும் செய்யும் என்பது சான்றோர் சொல், அந்த பணத்தை சேமிப்பது புத்திசாலித்தனம் ஆகும். வரும் பணத்தை சேமிப்பது தான் சாமர்த்தியமாகும். செல்வத்தைக் கையாளுவதே ஒரு கலை என்று சான்றோர்கள் கூறுவர். இப்படி மகத்துவம் உள்ள செல்வத்தை நாம் சேர்க்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

வீட்டில் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் நமக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து படி, சமையலறையில் சில விஷயங்களை செய்வதால் வீட்டில் நிதி வளம் பெருகும் என கூறப்படுகிறது. சமையலறையில் என்ன விஷயங்களை செய்ய வேண்டும் என இங்கே காணலாம்.

- Advertisement -

சமயலறை

சமையலறை அன்னை லட்சுமி இருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே, உங்கள் சமையலறை தென்கிழக்கு திசையை நோக்கி இருப்பதை உறுதிப்படுத்தவு. அதே போல, சமையலறையில் நீங்கள் உபயோகப்படுத்தாத பொருட்களை வைக்க வேண்டாம். அது, உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். அதே போல, சமையலறை எவ்வளவு அகலமாக இருக்கிறதோ, அவ்வளவு பண வரவும், அன்னபூரணியின் அருளும் கிடைக்கும் என‌ வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வெள்ளை நிறத்திலான இனிப்பு சுவை கொண்ட சர்க்கரை சுக்கிர பாகவானுக்கு பிடித்த பொருள். எனவே சர்க்கரை கொண்டு ஒரு பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் சுக்கிர பாகவானின் அருள் நமக்கு கிடைக்கும். சுக்கிர பாகவானின் அருள் கிடைத்தாலே மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சுக்கிர பகவானுக்கு அதிபதியாக விளங்குபவள் மஹாலக்ஷ்மி. எனவே சுக்கிர பாகவான் மற்றும் மகாலக்ஷ்மியின் அருள் சேர்ந்து கிடைக்கும் போது அதன் பலனும் அதிகமாக இருக்கும். எனவே பணப்புழக்கம் அதிகரிக்க சர்க்கரை டப்பாவில் இந்த பொருட்களை வைத்து பரிகாரம் செய்யுங்கள்.

பரிகாரம் செய்யும் முறை

இப்பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 மணிவரை அல்லது அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஆகிய நேரங்களில் இப்பரிகாரத்தை செய்யலாம். முதலில் ஒரு டப்பாவில் சர்க்கரையை நிரப்பி கொள்ளுங்கள். பிறகு, அதில் 3 கிராம்பு மற்றும் 1 துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து மூடி வைத்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பின் பூஜையறையில் பூஜை செய்யும் போது இந்த சர்க்கரை டப்பாவை வைத்து விட்டு உங்களுக்கு இருக்கும் அனைத்து பணப் பிரச்சனைகளும் தீர்ந்துவிட வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இப்போது இதனை எடுத்து வீட்டின் சமையலறையில் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். இதில் உள்ள சர்க்கரை நிறம் மாறவும் அதனை எடுத்து பறவைகளுக்கு வைத்து விடுங்கள். மீதமுள்ள கிராம்பினையும் இலவங்கப்பட்டையினையும் உங்கள் வீட்டு செடிகளில் போட்டு விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் பரிகாரம் செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. மேலும் பரிகாரம் செய்வதோடு மட்டும் இல்லாமல் பண வரவு அதிகரிப்பதற்கான முயற்சியினையும் விடாமல் செய்ய வேண்டும்.

-விளம்பரம்-