மீன் உணவுகள் அப்படி சொன்னால் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் மீன் குழம்பு , மீன் வறுவல் அப்படின்னு சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போனவர்களுக்காக புதுசா இப்ப நம்ம பண்ண போறது பால் சுறா புட்டு. இந்த சுறா புட்டு எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடிய தாய்மார்களுக்கு இந்த பால் சுறா புட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு உணவாகும்.
இந்த பால் சுறா புட்டு ரொம்பவே சுலபமா வீட்ல ரொம்ப ரொம்ப ஈஸியாவே பண்ணலாம். சுறாவில் புட்டு செய்து சாப்பிட்டு பாருங்க ரொம்பவே அருமையான சுவையில இருக்கும். இந்த பால் சுறா புட்ட நாம் சாப்பாட்டுக்கு சேர்த்தும் சாப்பிடலாம் இல்ல அதை ஸ்னாக்ஸ் மாதிரி அப்படியே கூட சாப்பிட்டுக்கலாம். இந்த பால் சுறாவோட சுவை ரொம்ப அருமையா இருக்கும். இந்த மாதிரி புட்டு செய்து சாப்பிடும்போது இன்னும் நல்ல டேஸ்டாக இருக்கும். இந்த பால் சுறா புட்டு சீக்கிரமா ரொம்பவே சுலபமா செய்து முடித்துவிடலாம்.
இந்த சுறா புட்டு செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படாது ரொம்பவே கம்மியான பொருட்களை வைத்து ரொம்ப சுவையான இந்த பால் சுறா புட்ட எப்படி சுலபமா தயாரிக்கிறது அப்படிங்கிறதை பார்க்க இருக்கிறோம். இந்த மாதிரி பால் சுறாக்கள் வாங்கறீங்கனா அதுல மீன் முள் கம்மியாவே இருக்கும். அதனால இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லாருமே சாப்பிடலாம். இந்த மாதிரி சுறாக்களில் முள்ளு இல்லாத சுறா மீன்கள் மற்றும் சில முள்ளாத மீன்கள் வாங்கி கொடுக்கும் பொழுது அவங்களும் விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. வாங்க இந்த பால் சுறா புட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
சுறா புட்டு | Sura Puttu Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 பால் சுறா
- 2 வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 4 பூண்டு
- 2 பச்சைமிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 எலுமிச்சைபழம்
- 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 ஸ்பூன் மிளகுத்தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் சுறா மீன்களை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். சுறா மீனில் மஞ்சள் தூள், எலுமிச்சை பழம் சிதறிதளவு உப்பு சேர்த்து நன்றாக ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- மீன்கள் 15 நிமிடம் ஊறிய பிறகு அவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொண்டுள்ள பால் சுறாக்களின் தோலை உரித்து விட்டு உள்ளே இருக்கக்கூடிய ஒற்றை முள்ளை எடுத்துவிட்டு மற்ற சதைப்பகுதிகளை கையால் அல்லது முள் கரண்டியாலோ பொடியாக பிசிறி விட வேண்டும்.
- பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பிறகு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
- பிறகு அதில் உதிர்த்து வைத்துள்ள சுறாமீன் சதைப்பகுதிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் . சுறா சதை பகுதிகள் நன்றாக பொடிமாஸ் போல் கலந்து வந்த பிறகு அவற்றின் மேல் எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.
- நன்றாக கலந்து பின் சூடாக எடுத்து பரிமாறினால் சுவையான பால் சுறா புட்டு தயார்.