உங்களிடம் பணம் இல்லை என்ற சூழ்நிலையே வராமல் இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள்கள் இருந்தால் மட்டும் போதும்!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் கையில் குறைந்தது ஒரு 500 ரூபாயாவது இல்லாமல் நம்மால் எங்குமே வெளியே செல்ல முடியாது அந்த அளவிற்கு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் நமக்கு வரும் சம்பள பணம் என்னவோ இன்னும் அப்படியே தான் உள்ளது. இருந்தாலும் அதையும் தாண்டி நம் குடும்பத்தை நடத்த வேண்டும் இப்படி உங்களுக்கு பணமே இல்லாத சூழ்நிலைகள் நெருக்கடிகள் நிறைய ஏற்படும். இன்னும் சில நபர்கள் எவ்வளவு பணம் நெருக்கடி வந்தாலும் யாரிடமும் பணத்திற்காக யாரிடமும் கையேந்தி நிற்க கூடாது என்பதிலும் ஒரு குறிக்கோளோடு இருப்பார்கள். இப்படி பணத்திற்காக யாரிடமும் கையேந்தி நிற்காமல் இருப்பதற்காகவும் இனி உங்களிடம் பணமே இல்லை என்ற சூழ்நிலை வராமல் இருப்பதற்காகவும் நாம் ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

முன்னோர்கள் பரிகாரம்

இப்படி நமக்கு பணம் தேவை வரும்போது பிறரிடம் பணம் கேட்டு நிற்கும் அளவிற்கு ஒரு பணம் இல்லாத சூழ்நிலை உங்களுக்கு உருவாகமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆன்மீக ரீதியாக ஒரு சிறிய எளிமையான பரிகாரம் செய்தால் மட்டும் போதும் இந்த பரிகாரத்தை நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக வாழையடி வாழையாக செய்து வந்துள்ளனர். இந்த பரிகாரத்தை தான் இப்போது நாமும் செய்யப் போறோம் இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு கையில் இரண்டு பொருள்கள் இருந்தால் மட்டும் போதும் பணமே இல்லாத சூழ்நிலை வராத அளவிற்கு செய்துவிடலாம்.

- Advertisement -

மகாலெட்சுமியின் அருள்

நாம் எப்போதும் பணம் தேவைக்காக பிரார்த்தனையோ அல்லது பரிகாரங்கள் செய்யும் போது நமக்கு மகாலட்சுமி தேவியாரின் அனுகிரகமும், ஆசீர்வாதமும் இருந்தால் போதும் நம்மிடம் சகல செல்வங்களும் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி மகாலட்சுமி தேவியின் அனுகிரகம் கிடைப்பதற்கு இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமையில் செய்வது நல்ல பலனைத் தரும் அப்படி இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு இரண்டு சோழி, சிவப்பு நிற சுருக்குபை, நான்கு கோமதி சக்கரங்கள் போன்ற பொருள்கள் மட்டும் தேவைப்படும்.

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு நீங்கள் வழக்கம் போல் காலையில் குளித்து முடித்துவிட்டு, சுத்த பத்தமாக உங்கள் பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி தேவியாரின் முன்பு ஒரு நெய் தீபம் ஏற்றி, தாய்க்கு மலர்களால் அலங்காரம் செய்து தீபா ஆராதனை, சாம்பிராணி தூபம் போட்டு தாயாரை வணங்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் தாயாருக்கு எளிமையாக நெய் வைத்தியம் ஏதாவது படைத்து விடுங்கள் இதையெல்லாம் செய்து முடித்துவிட்டு.

பணம் கையில் இருக்க பரிகாரம்

வழக்கம்போல் மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்துவிட்டு நீங்கள் பரிகாரம் செய்ய எடுத்துக் கொண்ட சிவப்பு நிற சுருக்கு பையில் இரண்டு சோழி, நான்கு கோமதி சக்கரம், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நாம் சமையலுக்கு வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் அரிசியிலிருந்து சிறிதளவு எடுத்து அந்த சுருக்கு பையில் போட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களிடம் இருக்கும் 500 ரூபாய் 100 ரூபாய் 50 ரூபாய் என எந்த பணம் இருந்தாலும் அதில் சிறிது போட்டு அந்த சிவப்பு நிற சுருக்கு பையை தாயாரின் படத்திருக்கு முன்பாக வைத்துவிட்டு மகாலட்சுமி தாயார் மனதார நினைத்து என்னிடம் பணம் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என தயாரிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பீரோவில் வையுங்கள்

அதன் பிறகு நீங்கள் வைத்திருக்கும் இந்த சிவப்பு நிற சுருக்கு பையை எடுத்துக்கொண்டு உங்கள் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் என்ன செலவுக்காக பணம் செலவு செய்தாலும் அதை இந்த பயத்தில் வைத்து எடுப்பதை வழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டு வரும் பொழுது உங்கள் பணம் வீண் செலவுக்கு என்று செலவாவது தடுக்கப்பட்டு உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

அப்படி உங்களிடம் சேரும் பணம் நாளடைவில் ஒரு சேமிப்பாக மாறி அதுவே உங்களுக்கு தேவையான நேரத்தில் கை கொடுக்கும். அதன் பின் உங்களிடம் பணம் இல்லை என்ற சூழ்நிலையை வராது பணத்திற்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலையும் வரவே வராது. மிகவும் எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் எந்த ஒரு செயலையும் முழு நம்பிக்கையோடு நேர்த்தியாக செய்யும் போது அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அதே போல தான் இந்த பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.