இந்த ஒரு விஷயத்தை பெண்கள் செய்தால் காலை மகிழ்ச்சியாக இருப்பார்கள்!

- Advertisement -

பொதுவாக காலையில் பெண்கள் எழுந்ததும் அவர்களுடைய தினசரி வேலைகளை முடித்துவிட்டு அவர்கள் முதலில் வேலை பார்க்கும் இடமே சமையலறை தான் அப்படி பெண்கள் முதலில் வேலை செய்யும் சமையல் அறையில் சந்தோசமாகவும் மன புத்துணர்ச்சியுடன் வேலை பார்க்க ஆரம்பிக்கும் போது அந்த நாளை அவர்களுக்கு சந்தோஷமாக அமையும் அடுத்தடுத்து அடுத்து அவர்கள் செய்யக்கூடிய வேலைகளையும் சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாக செய்வார்கள். அதனால் பெண்கள் தினமும் மகிழ்ச்சியான இருப்பதற்காக அவர்கள் மனநிலையை சீர் செய்வதற்கான ஆன்மீக ரீதியான சில விஷயங்களை தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காண உள்ளோம்

-விளம்பரம்-

அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்துவிட்டு அதற்கு அப்புறமாக நீங்கள் இதை தினசரி செய்து பாருங்கள் பின் நீங்கள் ஒரு நாள் முழுவதும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதன்பின் யார் என்ன சொன்னாலும் நீங்கள் நான் சொல்ல இந்த வேலைகளை செய்து முடித்துவிட்டு தான் அந்த நாளில் தூங்கவே செல்வீர்கள் அந்த அளவிற்கு இந்த பதிவில் நான் சொல்லப்போகும் விஷயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -

மகிழ்ச்சி நிறைவாக இருக்கும்

முதலில் நாம் பார்க்கப்போவது பெண்கள் எப்போதும் வீட்டில் செய்வது தான். அதாவது வீட்டில் இருக்கும் எச்சி பாத்திரங்களை முதலில் சுத்தமாக கழுவி விட்டு அப்படியே சிங் மற்றும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் கேஸ் அடுப்பை துடைத்து சுத்தமாக வைத்துவிட்டு. அதன் பிறகு தூங்க சொல்லுங்கள் இப்படி பெண்கள் இரவு நேரத்தில் இந்த வேலைகளை பார்ப்பதனால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்கள். அவர்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. ஏன் சிறிது அளவு மனக்கஷ்டம் கூட வராது குறைவான வருமானம் இருந்தால் கூட நிறைவான சந்தோஷமும் மகிழ்ச்சியும் வீட்டில் நிறைய இருக்கும்.

அக்ஷயம்

மேலே சொன்னது போல் பாத்திரங்கள், சிங் மற்றும் கேஸ் அடுப்பை தொடைத்து முடித்துவிட்டு அதன் பின்பு உங்கள் வீட்டு சமையல் மேடையும் சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாக அரிசி மாவு அல்லது கோலமாவு பயன்படுத்தி உங்கள் வீட்டின் சமையல் மேடையில் அக்ஷயம் என்ற வார்த்தையை எழுதி விடுங்கள். நீங்கள் இப்படி செய்யும் பட்சத்தில் அது உங்கள் வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சம் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ளும். ஏன் ஒரு சாக்பீஸை பயன்படுத்தி ஆவது எழுதி விடுங்கள் நீங்கள் எழுதும் அக்ஷயம் என்ற வார்த்தையில் அன்னலட்சுமி உங்கள் பரம்பரைக்கே உணவளிப்பாள்.

கோவில் செல்வது போல

இப்படி சின்ன சின்ன விஷயங்களை வீட்டில் உள்ள பெண்கள் இரவில் செய்து வரும் போது அடுத்த நாள் காலையில் நீங்கள் சமையல் அறைக்கு செல்லும்போது உங்க மனநிம்மதியுடன் மகிழ்ச்சியாகவும் நீங்கள் வேலை பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். ஏன் நீங்கள் காலை சமையல் கட்டிகல் நுழையும் போது ஏதோ கோவிலுக்குள் செல்லும்போது, பூஜை அறைக்கு செல்லும்போது ஏற்படும் மன நிம்மதி உங்களுக்கு ஏற்படும். இப்படி இந்த விஷயங்களை நீங்கள் இரவு நேரத்தில் தொடர்ந்து செய்து ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான நாளாகவே அமையும். நம்பி செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here