- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, tamilnadu
- Course
- Koottu, LUNCH
உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, பேச்சு, உணவு, கலாச்சாரம் என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசமான உணவுகள், ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தனர். கத்தரிக்காய் குழம்பில் சுட சுட சாதம் பிசைந்து சாப்பிடுவதே தனி சுவைதான்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கத்தரிக்காய் மிளகு கறி கூட்டு இப்படி செய்து பாருங்க ? யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
அந்த வகையில் கத்தரிக்காயை சுட்டு குழம்பு வைத்து அதை சாப்பிடுவதில் இருக்கும் சுவை வேறெதிலும் இருக்க முடியாது. அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் சுட்ட கத்தரிக்காய் தந்தூரி மசியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். கத்திரிக்காய் மசியல் என்பது கத்தரி மற்றும் பச்சை மிளகாயுடன் செய்யப்படும் புளி சார்ந்த குழம்பு ஆகும்.இது நம் சமையலறையில் நாம் அடிக்கடி செய்யும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். சுடு சோறுடன் சுட்ட கத்தரிக்காய் குழம்பு சாப்பிட்டால் அவ்வளவு சுவையான இருக்கும்.
Ingredients
Method
கத்தரிக்காய் மேல் நெய் தடவி அடுப்பில் நன்கு சுட்டு எடுக்கவும்.
அதன் தோலை சுத்தமாக எடுத்து கட் செய்து வைக்கவும்.
மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் கட் செய்து வைத்த கத்திரிக்காயை போட்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் கிளறி விடவும்.
பின்னர் நன்கு கடைந்து இறக்கவும். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அல்லது சைட் டிஷ்ஷாக பயன்படுத்திக் கொள்ளலாம்.






