இன்று தை அமாவாசை நாளிலும் அதற்கு பிறகும் ராஜ யோகம் கிடைக்கப் போகும் ஆறு ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

- Advertisement -

பிப்ரவரி ஒன்பதாம் தேதி அன்று முக்கியமான அமாவாசைகளில் ஒன்றான தை அமாவாசை ஆகும். அந்த தை அமாவாசை அன்றும், அதற்கு பிறகும், ஜோதிடத்தின் அடிப்படையில் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு என்ன வகையான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்பதை பற்றி ஜோதிட அடிப்படையில் இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மேஷ ராசி

செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு முன் கோபம் அதிகமாக வரும் ஆனாலும் அவர்கள் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு செய்த உதவி அவர்களுக்கு பல வகைகள் நன்மைகளை அள்ளித் தரும். வேலை இல்லாதவர்களுக்கு அல்லது வேலையில் முன்னேற்றம் தேடுபவர்களுக்கு சீக்கிரமாகவே அவர்கள் எண்ண படி அவர்கள் நினைத்தபடி வேலை கிடைக்கும். கடன் பிரச்சனையால் பல பிரச்சனைகளை சந்தித்த உங்களது வாழ்க்கையில் தோற்றுப் போகும் இந்த அதிர்ஷ்டத்தால் கடன் பிரச்சினைகள் எல்லாம் விரைவில் சரியாகிவிடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுப காரியங்கள் அனைத்தும் விரைவில் நடக்கும். கடவுள் உங்களை பல வழிகளில் சோதித்து இருந்தாலும் தை அமாவாசை முதல் உங்களுக்கு கடவுளின் அனுகிரகத்தால் நல்லதே நடக்கும்.

- Advertisement -

ரிஷப ராசி

நீண்ட நாட்களாக நீங்கள் மிகவும் ஆசைப்பட்டு கொண்டிருந்தவைகள் எல்லாம் உங்களுக்கு விரைவில் கிடைக்கப் போகிறது. எப்பொழுதும் குறிக்கோளை நோக்கி கடினமாக உழைக்கின்ற உங்களுக்கு கூடிய விரைவில் அந்த உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் இந்த தை அமாவாசைக்கு பிறகு தொடங்கினால் மிகவும் நல்லது. வயதான ரிஷப ராசிக்காரர்கள் ஆன்மீக பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இருந்தால் நிச்சயமாக அந்த ஆசை நிறைவேறும். கடன் பிரச்சனையில் உள்ளவர்களுக்கு அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் வரும் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு நீங்கள் நினைத்தபடி வேலை கிடைக்கும். கடவுளின் பரிபூரண அனுக்கிரகத்தால் இனிவரும் காலம் உங்களுக்கு நல்ல காலம் தான்.

கடக ராசி

இன்பமோ துன்பமோ எதையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல் இயல்பான குணம் படைத்த கடக ராசிக்காரர்களே இனிவரும் காலங்களில் உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நீங்கள் நினைத்து வைத்திருக்கிற நல்ல காரியம் எதுவாக இருந்தாலும் விரைவில் கைகூடிவரும். நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தால் அந்த காதல் வெற்றி பெற்று திருமணம் வரையிலும் செல்லும். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்தால் அதன் மூலம் உங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கலாம். புதியதாக வீடு வாகனம் மற்றும் தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நிச்சயமாக நிறைவேறும். நீங்கள் நினைத்து வைத்ததெல்லாம் நடக்கக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த நாட்கள் உங்களுக்கு தை அமாவாசை முதல் வரப்போகிறது

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. அவர்கள் எப்பொழுது கோபப்படுவார்கள் எப்பொழுது அன்பாக பழகுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. இப்படி யோசிக்கவே முடியாத ஒரு குணத்தில் இருக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த சில நாட்களாக பல விதமான கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள். ஆனால் அந்த கஷ்டங்கள் எல்லாம் விரைவில் விலகிப் போகும் படி அடுத்த ஒரு மாதத்திற்கு நல்லதே நடக்கும். நீங்கள் சந்திக்கப் போகும் பல புதிய மனிதர்களால் உங்கள் வாழ்க்கையில் புது அனுபவம் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழியாக அமையும். மன நிம்மதியும் நிம்மதியான தூக்கமும் இந்த ஒரு மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும். கஷ்டங்கள் அனைத்தும் விலகி பலவிதமான ஆச்சரியங்கள் உங்களை வந்து விரைவில் சேரும்.

-விளம்பரம்-

மகர ராசி

அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்காமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்ளும் மகர ராசிக்காரர்களுக்கு இதுவரையில் பட்ட அவமானங்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ளவர்கள் என யார் உங்களை அவமானப் படுத்து இருந்தாலும் அதற்காக வருந்தி உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். பண கஷ்டங்கள் அனைத்தும் உங்களுக்கு தீர்ந்து போய்விடும். கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒன்று சேர்வார்கள். உங்களுக்கு கெட்டவைகள் நினைத்த அனைவரும் உங்களை புகழக்கூடிய ஒரு மாதம் தான் இது.

மீன ராசி

மிகவும் வெகுளித்தனமாக குழந்தைத்தனமாக அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடிய ஒரு ராசிக்காரர்கள் தான் இந்த மீன ராசிக்காரர்கள். அனைவரிடத்திலும் மிகவும் எளிதாக பழகுவதால் அவர்கள் நொடியில் உங்களை ஏமாற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் அனுபவித்த பிரச்சினைகள் எல்லாம் இந்த மாதம் உங்களுக்கு சரியாகிவிடும். பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி கடன் சுமை குறைந்து அடகு வைத்த அனைத்து நகைகளையும் உங்களால் மீட்டெடுக்க முடியும். நீண்ட தூர பயணம், இடமாற்றம் இவை அனைத்தும் தொழிலில் நல்ல பலனை கொடுக்கும். தொழில் மற்றும் வேலையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொண்டு அதன் மூலமாக நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.