உங்கள் வீட்டில் மடமடவென தங்கம் சேர வெள்ளிக்கிழமை இப்படி பூஜை செய்யுங்கள்!

- Advertisement -

சமீப காலமாகவே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மடமடவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் விடை உயரும் போது கூட பலரும் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் தங்களின் ஆடம்பத்திற்காக தங்க நகைகள் வாங்குவார்கள், சிலர் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக வாங்கிக் கொள்வார்கள், ஆனால் இன்னும் சிலரோ தங்கள் மகளின் கல்யாணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அனைவரும் தங்கம் அவர்கள் வாங்குவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அப்படி நாம் வாங்கும் தங்கம் எப்போது நமக்கு ஒரு முதலீடாகவே இருக்கும் அந்த வகையில் நீங்களும் உங்கள் வீட்டில் மடமடவென தங்கத்தை வாங்கி சேர்ப்பதற்காக ஆன்மீக ரீதியாக சில வழிகள் உண்டு அதை பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

தங்கம் மகாலட்சுமியின் அம்சம்

பொதுவாக வீட்டில் ஒரு குண்டு மணி அளவிலாது தங்கம் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம், உங்கள் வீட்டில் தங்கம் இருக்கிறது என்றால் அங்கு மகாலட்சுமி இருப்பதாக அர்த்தம். தங்கத்தை விட வியை உயர்ந்த எவ்வளவோ உலோகங்கள் இருந்தாலும் ஏன் குறிப்பாக தங்கத்தை வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா ? ஏனென்றால் தங்கம் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் தன்மையை கொண்டது குறிப்பாக தங்கம் மகாலட்சுமியின் அம்சம். ஆனால் உங்கள் வீட்டில் உள்ள தங்கம் மேலும் மலை மேல பெருகுவதற்காக வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் ஒரு பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

தங்கதிற்கு மதிப்பு மரியாதையும் உண்டு

நீங்கள் உங்கள் வீட்டில் தங்க நகைகளை வைத்திருக்கும் இடத்தில் வாசனையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் அதுவும் மாகலட்சுமிக்கு பிடித்த வாசனை பொருட்களாக நிறைத்து இருக்க வேண்டும். தங்க நகைகளை எப்போதும் அனைத்தையும் ஒரே பெட்டியில் போட்டு மூடி வைக்கக் கூடாது நகைகளை தனித்தனியாக அதற்குரிய பெட்டிகளில் போட்டு தனியாக தான் வைக்க வேண்டும். அப்போதுதான் அதற்குரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். நீங்கள் கடைகளில் நகை வாங்க சென்றால் கூட எவ்வளவு நகைகள் வாங்கினாலும் தனித்தனியாக அதன் பெட்டிகளில் வைத்து தான் தருவார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் தங்க நகைகளை தனித்தனியாக வைப்பது தான் நல்லது.

தங்கம் வைக்கும் இடம்

தங்க நகைகளை வீட்டில் கண்ட இடத்தில் வைத்து எடுக்கக் கூடாது. தங்க நகைக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் ஏனென்றால் தங்கம் மகாலட்சுமியின் அம்சமாக விளங்குவது நீங்கள் வீட்டில் தங்கத்தை வைக்கும் போது கூட பீரோவில் அதற்கென்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி அதில் பட்டு துணியை விரித்து அதன் மேல் பன்னீர் தெளித்து அதில் தான் தங்க நகைகளை வைத்து புழங்க வேண்டும் மேலும் உங்கள் வீட்டில் தங்கம் மடமவவன சேர்வதற்கு உங்களிடம் இருக்கும் தங்கத்தை வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜை செய்யும் போது இந்த பொருள் இருக்க வேண்டும்

அப்படி பூஜையில் வைக்கும் நகைகளுடன் ஒரு கலசத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் கல்லுப்பு போட்டு நகைகளுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு பூஜை முடிந்த பின் நகைகளை அணிவது என்றால் அணிந்து கொள்ளுங்கள் இல்லை பீரோவில் வைக்க போகிறீர்கள் என்றால் ஒரு சிறிய பட்டு துணியில் நான் சொல்லும் இந்த பொருட்களை (கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், சாதாரண கற்பூரம் கொஞ்சம், நாலைந்து துளசி இலை) போட்டு ஒரு சிறிய முடிப்பாக முடிந்து நகைகளுடன் வைத்துக் கொள்ளுங்கள் இந்த முடிப்பிலிருந்து வரும் தெய்வீக மணமும் வாசனையும் மகாலட்சுமி இந்த நகையின் பக்கம் ஈர்க்கும். இதனால் உங்கள் வீட்டில் உள்ள தங்கம் மென்மேலும் உயரும் நீங்களும் மடமடவன தங்கம் வாங்கி சேர்த்துக் கொண்டே இருப்பீர்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here