தினமும் என்ன சமையல் செய்வதென்பதே வீட்டிலுள்ள பெண்களின் கவலையாக இருக்கும். ஒரே மாதிரியான பருப்பு, சாம்பார், ரசம் என்று செய்து கொடுத்தால் சலித்துக் கொண்டு தான் சாப்பிடுவார்கள். எனவே இன்று மதியம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு வத்த குழம்பு ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த வத்தக் குழம்பை சற்று வித்தியாசமான சுவையிலும் , கேரளாவின் ஸ்டைலிலும் செய்ய உள்ளோம். இதற்கு கேரளாவில் தீயல் என்றழைப்பார்கள். கேரளா என்றாலே ஓணம் பண்டிகையும் அதில் பரிமாறப்படும் சத்யா விருந்தும் தான் முதலில் நினைவுக்கு வரும்.
கேரள மாநிலத்திற்கென்றே தனித்துவமான சில உணவு வகைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஓணம் திருநாளன்று இடம் பெற்றிருக்கும். அதில் மிக முக்கியமான ஒரு ஸ்பெஷல் ரெசிபி தான் இந்த உள்ளி தீயல். இதனை செய்யும் பொழுதே வீட்டில் உள்ளவர்கள் என்ன சமைக்கிறீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும். பொதுவாக இந்த ரெசிபியானது வத்தக்குழம்பு போன்று இருக்கும். வத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை கேரளா நாட்டினர் தீயல் என்று அழைப்பார்கள். இந்த தீயல் ரெசிபியின் ஸ்பெஷலே அதன் மசாலா தான்.
அதிலும் இந்த மசாலாவை அம்மியில் அரைத்து செய்தால், தீயல் ரெசிபியின் சுவைக்கு இணையாக எதுவும் வர முடியாது. மேலும் தீயல் ரெசிபியில் நமக்கு வேண்டிய எந்த ஒரு காய்கறிகளையும் பயன்படுத்தலாம். இங்கு முருங்கைக்காய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தி தீயல் ரெசிபியானது செய்யப்பட்டுள்ளது. தேங்காயைத் தீய்த்து, அதாவது பொன்னிறமாக வறுத்து அரைத்து சேர்ப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வத்த குழம்பு பல வகைகளில் செய்யலாம். இப்படி ஒரு முறை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த வகை வத்தல் குழம்பை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் நாம் காண்போம்.
இதனையும் படியுங்கள் : இந்த மழைக்கு இதமா சுட சுட கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…