Home ஆன்மிகம் உங்கள் சம்பளம் உயர வேண்டுமா ? தினமும் உங்கள் கையில் இதை மட்டும் தடவுங்கள் போதும்!

உங்கள் சம்பளம் உயர வேண்டுமா ? தினமும் உங்கள் கையில் இதை மட்டும் தடவுங்கள் போதும்!

மாத தொடக்கத்தில் சம்பளம் வாங்கியதும் குடும்பத்தை சந்தோஷமாக நடத்துபவர்களுக்கு மாத இறுதியில் குடும்பத்தை நடத்த போதிய பணம் இருக்காது. இது மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் சொந்த தொழில் செய்பவரே ஆனாலும் மாத கடைசியில் திண்டாட்டம் தான். அதிலும் வந்த வருமானத்தை சேமிக்காமல் விட்டுவிட்டால், அது இன்னும் ரொம்ப ரொம்ப கஷ்டம். மாத கடைசியில் கடன். மீண்டும் அடுத்த மாதம் தொடக்கத்தில் சம்பளம் வந்தவுடன், அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிட்டு, மாத இறுதியில் செலவுக்கு காசு இல்லாமல் திண்டாடுவோம். இந்த நிலையை மாற்றுவதற்கு என்னதான் செய்ய வேண்டும்.செலவை குறைக்க வேண்டும்.

-விளம்பரம்-

கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது. வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சின்ன தொகையை மாதத்தின் இறுதி செலவுக்காக, கண்ணுக்குத் தெரியாமல் ஒரு பர்ஸில் போட்டு பரண்மேல் வைத்து விடுங்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தொடாதீர்கள். மாத இறுதி பத்து நாளைக்கு தான் செலவுக்கு அந்த பணம் என்று ஒதுக்கி வைத்து விடுங்கள். இது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். கடன் இல்லாமல் வாழ்வதற்கு இந்த குறிப்பு உபயோகமாக இருக்கும்.

சரி பணம் நம் கையில் தங்குவதற்கு என்ன தான் செய்ய வேண்டும்?

நம் கையை ராசியான கையை மாற்றுவதற்கு என்னதான் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் உள்ளது தினமும் நம் குல தெய்வத்தை நினைத்து ஒரு பரிகாரத்தை செய்தால் நம் கைக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.

காந்தம் போல பணத்தை ஈர்க்கக்கூடிய மாசிக்காய் பரிகாரம் :

நாட்டு மருந்து கடைகளில் இந்த மாசிக்காய் பொடியாக கிடைக்கும் அல்லது எண்ணெய் கடைகளில் மாசிக்காய் எண்ணெய் என்று கிடைக்கும். உங்களுக்கு எது தேவையோ அதனை வாங்கிக் கொள்ளுங்கள். எழுந்தவுடன் குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு பின் சாப்பிட்டுவிட்டு உங்களுக்கு என்ன வேலை இருக்கிறதோ அதனை பார்க்கச் செல்வீர்கள். அப்படி வெளியே கிளம்பும் வேளையில் ஒரு நிமிடத்திற்கு முன்னர் உங்கள் குலதெய்வத்தை நினைத்து வணங்கி விட்டு இந்த மாசிக்காய் பொடியை உங்கள் உள்ளம் கையில் நன்றாக தேய்த்து விட்டு கிளம்புங்கள்.

மாசிக்காய் பொடி

இது வெளியில் சென்று சம்பாதித்து வருபவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் குடும்ப தலைவியாக இருக்கும் பெண்களுக்கும்தான். கணவர் கொடுக்கும் பணத்தை வாங்கி பீரோவிலோ அல்லது பர்சிலோ தான் பெண்கள் வைப்பார்கள். அப்படி அவர் கொடுக்கும் பணத்தை வாங்குவதற்கு முன்னர் அவர்கள் தங்கள் கைகளில் இந்த மாசிக்காய் பொடியை தேய்த்துக் கொண்டு வாங்கினால் அவர்கள் கையிலும் பணம் புரளும்.

-விளம்பரம்-

அப்போது நீங்கள் கையில் வாங்கிய பணம் வீண் செலவு ஆகாமல் வீட்டில் சேமிப்பில் இருக்கும். பணத்தை நிறைய சேர்க்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் கூட இதை கையில் பூசிக்கொள்ளலாம் தவறு கிடையாது. பணத்தை காந்தம் போல ஈர்க்க இந்த வாசம் உங்களுக்கு ஒரு வழியை காட்டும். இப்பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதனை நீங்களும் செய்து வீண் செலவு செய்யாமல் பண சேமிப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.

-விளம்பரம்-