Home ஆன்மிகம் பீரோவில் இந்த பொருள் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்கவே நிலைக்காது என்பது தெரியுமா?

பீரோவில் இந்த பொருள் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்கவே நிலைக்காது என்பது தெரியுமா?

நமது வீட்டில் பீரோவில் தான் நாம் எல்லா பொருட்களை வைப்போம். குறிப்பாக துணிகள், நகை, பணம், சான்றிதழ்கள் என எல்லாவற்றையும் வைக்கும் ஒரு இடமாக தான் பீரோ திகழ்கிறது. பீரோவில் தான் மகாலட்சுமி குடியிருப்பாள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பீரோவில் சில பொருட்களை வைத்தால் சுபிட்சமாக குடும்பம் வளரும் என்றும் சில பொருட்களை வைத்தால் குடும்பத்தில் பணம் நிலைக்காது எனவும் சான்றோர்கள் கூறுகிறார்கள். அது என்ன பொருள் என்பதை பற்றியும் அதனை ஏன் பீரோவில் வைக்கக்கூடாது என்பதனை பற்றியும் இந்த ஆன்மீக பதிவில் காண்போம் வாருங்கள்.

-விளம்பரம்-

இரும்பு அல்லது மர பீரோ

மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பீரோ இரும்பினால் அல்லாது மரத்தால் ஆனதாக இருந்தால் ரொம்பவும் விசேஷமானது. அதிலும் தேக்கு தேக்கி வைக்க கூடிய அம்சம் என்பதால் தேக்கு மரத்தால் ஆன பீரோ வைத்திருந்தால் பணம் அதிகம் சேரும். சரி, இப்பொழுது எல்லோருடைய வீட்டிலும் இரும்பு பீரோ தான் இருக்கிறது. இத்தகைய இரும்பு பீரோவில் மேலும் இரும்பு பொருட்களை கொண்டு போய் சேர்க்கக்கூடாது. இது பணவரவை தடை செய்யும் என்று கூறுகிறது ஆன்மீகம்.

பீரோவில் மகாலட்சுமி விநாயகர் மற்றும் பெருமாள் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி வைத்து அவர்களுக்கு தினமும் கற்பூரம் காட்டினால் மிகவும் விஷேசமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் நம்மில் பலரும் அதனை தவறவிடுகின்றோம்.

எலக்ட்ரானிக் பொருட்கள்

நம்மில் பலரும் எலக்ட்ரானிக் சாதனங்களை பீரோவில் அடுக்கி வைப்பதுண்டு அப்படி அடுக்கி வைப்பது எதிர்மறை ஆற்றலை உருவாக்கி வீட்டில் பணம் தங்குவதை தடுக்கிறது என்று கூறுகிறார்கள். எனவே பழைய ஃபோன்கள், சார்ஜர்கள், வயர்கள் ஆகியவற்றை நாம் பீரோவில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பயன் படுத்தாத பழைய பொருட்கள்

பீரோவின் கடைசி பகுதியில் நாம் துணிமணிகளை அடுக்கி வைப்போம். அதில் சிலவற்றை மடிக்காமல் குப்பையாக திணித்து வைத்திருப்பது இயல்பான ஒன்றே. இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து பணவரவை குறைக்க செய்து விடும். பொருளாதார வாய்ப்புகள் குறையும் அபாயமும் உண்டு. ஓடாத கடிகாரங்கள், ஸ்மார்ட் வாட்ச், வாட்ச், ரப்பர் பொருட்கள், கிப்ட் ஐட்டங்கள், பிஞ்சி போன பொம்மைகள், அறுந்த காலணிகள், ஷூக்கள் இவற்றைக் கூட நீங்கள் அவ்வபொழுது அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

-விளம்பரம்-

எவ்வளவு நாட்கள் ஆனாலும் இவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாமல் இருக்கும் பட்சத்தில் இவற்றை கொண்டு போய் பீரோவில் வைத்தால் அதில் எதிர் மறை ஆற்றல் உருவாகும். எந்த இடத்திலும் ஒரு நேர்மறை ஆற்றல் இருக்குமோ அங்கு இருக்கக்கூடிய பொருட்களுக்கும் நேர்மறையான பலன்கள் இருக்கும். மேலும் பீரோவில் தூசிகளை சேர விடக்கூடாது. கடைசி கீழ்ப்பகுதியில் அதிகம் தூசுகள் அடைந்து கிடக்கும். அந்த இடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பீரோ முழுவதுமே எப்பொழுதும் வாசனையாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தான் பூஜை செய்யும் பொழுது பீரோவை திறந்து அதற்குள்ளும் தீப, ஆரத்தி காண்பிக்கிறோம். சாம்பிராணி புகையை கூட பீரோவிற்குள் காண்பிப்பது உண்டு. இது போன்ற பூஜை முறைகளை கையாளும் பொழுது அங்கு வைக்கும் பணம் அல்லது நகையாவது மென்மேலும் சேரும். குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும். வருமானத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கையாக இன்றளவிலும் இருந்து வருகிறது.

-விளம்பரம்-