Home ஆன்மிகம் வெள்ளிக்கிழமை வாங்க கூடாத சில பொருட்கள்!!

வெள்ளிக்கிழமை வாங்க கூடாத சில பொருட்கள்!!

செல்வ செழிப்பை கொடுக்கக்கூடிய மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரிய நாளாக திகழக்கூடியது தான் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை என்று மகாலட்சுமி தேவியாரை வழிபாடு செய்து வந்தால் வீட்டில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் மகிழ்ச்சி தங்கி இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க வெள்ளிக்கிழமை அன்று அனைத்தும் நேர்மறையாக நடப்பதற்கு வெள்ளிக்கிழமை என்று ஒரு சில பொருட்களை நாம் வாங்கக்கூடாது இது சாஸ்திரங்கள் கூறுவது. அப்படி வெள்ளிக்கிழமை என்று வாங்கக்கூடாத சில பொருட்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை அன்று வாங்க கூடாத பொருட்கள்

பொதுவாக ஒரு சிலர் பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று கடனாக சில பொருட்களை வாங்கி வருவார்கள். மளிகை கடையில் மட்டும் இல்லாமல் காய்கறி கடை என அத்தியாவசிய தேவைக்காக அவசர தேவைக்காக கடன் வாங்குவோம். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் கடனாக நாம் எந்த ஒரு பொருளையும் வாங்கக்கூடாது, பணத்தை கொடுத்து தான் வாங்க வேண்டும். அப்படி கடனாக பொருட்களை வாங்கும் போது எதிர்மறையான பலன்கள் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த துளசி செடியில் இருந்து துளசி இலைகளை பறிக்கக் கூடாது.

தோல் சம்பந்தமான பொருட்கள் தோலாலான செருப்பு பைகள் போன்றவற்றை வாங்க கூடாது அது எதிர்மறையான பலன்களை கொடுக்கும்.

வெள்ளிக்கிழமை என்று இரும்பு சார்ந்த பொருட்களை வாங்கவே கூடாது அது சனிபகவானுக்குரிய பொருள் என்பதால் எதிர்மறை பலன்களை கொடுக்கும்.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை என்று கசப்பு நிறைந்த பாகற்காய் போன்றவற்றை வாங்க கூடாது. அதேபோல் எண்ணெய் புளி போன்றவற்றையும் வாங்கக்கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று வாங்க வேண்டிய பொருள்

வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்குவது மிகவும் சிறந்தது. மேலும் துவரம் பருப்பு நெய் பச்சரிசி காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்குவதும் சிறந்தது.

வெள்ளிக்கிழமை மௌன விரதம்

வெள்ளிக்கிழமை என்று அனைவருமே மிகவும் சாத்வீகமாக அமைதியாக இருப்பது நல்லது. அந்த வகையில் அந்த நாள் என்று மௌன விரதம் இருந்து மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்வது எதிர்மறையான சிந்தனைகளை நீக்கி நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை மௌன விரதம் இருப்பதால் தீய வார்த்தைகளை உச்சரிப்பது, அழுவது மற்றவர்களை ஏளனமாக பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றை தவிர்க்கலாம். இது மனதிற்குள் நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி வாசம் செய்யும் சமயலறை பொருட்கள்