உங்களுக்கு பண‌ கஷ்டம் வராமல் இருக்க வீட்டில் இந்த 8 பொருட்களை குறையாமல் பார்த்துக் கொள்ளங்கள்!

- Advertisement -

நம் முன்னோர்களின் காலத்தில் உணவு, உடை, இருப்பிடம் தான் முக்கியமாக தேவைப்பட்டது. இதற்காக அன்றைய நாள் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் வாங்கிய பணத்தை செலவுக்கே சரியாக போகிறது, பணத்தை சேமிக்கவே முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். பணம் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக சென்று காசு கொடுத்து செலவு செய்வார்கள்.

-விளம்பரம்-

எல்லோருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அது வீட்டில் தங்கவில்லை என்று புலம்புபவர்களே இங்கு அதிகமாக இருக்கிறார்கள். அப்படி புலப்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை படித்து உங்கள் வீட்டில் பணவரவை அதிகரிக்க செய்யுங்கள்..!

- Advertisement -

அஞ்சறைப் பெட்டி

அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்காதீர்கள். மகாலட்சுமிக்கு ரொம்ப பிடித்தமான இடமே சமையல் அறை தான். அதனால் தான் உப்பு, அரிசி போன்றவைகளை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். மேலும் அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்களை குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். அதவாது சுத்தமாக பொருட்களை துடைத்து விடாதீர்கள்.

ஊறுகாய்

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். குறிப்பாக நெல்லிக்காய் ஊறுகாய் இருக்கு வீட்டில் குபேரரே வாசம் செய்வார்.

கல் உப்பு

கல் உப்பு மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த பொருளாகும். யார் ஒருவர் வீட்டில் கல் உப்பு நிறைந்து இருக்கிறதோ அந்த வீட்டில் பண வரவு அதிகரித்து இருக்கின்ற கடன் படிப்படியாக குறைந்து பணம் சேருகின்ற சூழ்நிலை உருவாகும் என ஆன்மீக குறிப்பு கூறுகின்றது.

-விளம்பரம்-

அரிசி

அரிசியிலும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ளது, மேலும் சுக்கிரனின் அம்சமும் பொருந்தும். ஆக இந்த அரிசியை வீட்டில் என்றென்றும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் அரிசியை குறிப்பிட்ட இடத்தில மட்டும் தான் வைக்க வேண்டும் அரிசி எடுக்கும் பாத்திரத்தை கவிழ்த்து வைக்க கூடாது.

எண்ணெய்

எண்ணெய் பொருட்கள் என்பது சனீஸ்வர பகவானுக்கு மிகவும் உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. எண்ணெய் இல்லாமல் சமையல் செய்ய முடியாது. ஆக இந்த எண்ணெய் பொருட்களும் வீட்டில் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் மற்றும் குங்குமம்

மங்களகரமான விஷயங்கள் அனைத்திற்கும் அவசியம் பயன்படுத்தப்படும் பொருட்கள் தான் மஞ்சள் மற்றும் குங்குமம். இந்த மஞ்சள் குங்குமமும் வீட்டில் என்றும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் மஞ்சள் குங்குமம் குறையாமல் இருந்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

தண்ணீர் குடம்

வீட்டில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஏதாவது ஒரு குடமாவது சிலர் அல்லது காப்பர் குடத்தில் இருப்பது மிகவும் சிறந்தது. அத்தகைய குடங்களில் பிடித்து வைக்கப்படும் தண்ணீர் நிரம்பியே இருக்க வேண்டும். இது உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும்.

புளி

நம் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை எப்பொழுதும் காலியாக வைக்க கூடாது. அது மட்டுமல்லாமல் புளி வைக்கும் டப்பா பீங்கானில் அல்லது மண் குடுவையில் தான் இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் அனைவரும் புளியை மண் குடுவையில் தான் வைத்திருப்பார்கள். இதை நாம் பின்பற்றும் பொழுது நமது வீட்டில் பண தடை என்பது இருக்கவே இருக்காது.