சமையல் அறையில் இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால், வீட்டில் பணம் இல்லை என்ற வார்த்தையே வராது!

- Advertisement -

அந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நமது வாழ்வில் இருந்து சற்றே மாறுபட்டிருக்கும். அவர்கள் எப்பொழுதும் அவர்கள் சமையலறையில் சில விஷயங்களை நிறைய நிறைய வைத்திருப்பார்கள் அதனை குறைய விடமாட்டார்கள். அது மட்டும் இன்றி காலம் அறிந்து சமையல் செய்வது சமையல் செய்யும் போது உள்ள நுணுக்கங்கள் என நிறைய விஷயங்களை கடைப்பிடித்து இருப்பார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அவசரமான இந்த சூழ்நிலையில் பல விஷயங்களை நாம் கடந்தும், மறந்தும் விட்டோம் என்பதே உண்மை.

-விளம்பரம்-

இவர்கள் கடைபிடித்த விஷயங்களில் அஞ்சரை பெட்டி முகவும் முக்கியமான ஒன்று. ஆம் ஒரு வீட்டின் அஞ்சறைப்பெட்டி நிறைவாகவே இருக்க வேண்டும். அதனை வைத்தே அந்த குடும்பம் சுபிட்சமாக இருக்கிறதா இல்லையா என்பதனை அறிய கூடிய வழக்கம் நம்மில் உள்ளது.

- Advertisement -

எந்த அஞ்சறைப்பெட்டியை பயன்‌படுத்த வேண்டும் ?

அஞ்சறைப்பெட்டி பொருத்தவரை நாம் எப்பொழுதும் சில்வராலான அஞ்சறைப்பெட்டியவே பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் பலரும் அவர்களது வீட்டில் பிளாஸ்டிக் அஞ்சறைப்பெட்டியை தான் பயன்படுத்துகிறார்கள்‌. ஆனால் அப்படி பயன்படுத்தக் கூடாது என்று நமது சாஸ்திரம் சொல்லுகிறது. சில்வராலான அஞ்சறைப்பெட்டியை பயன்படுத்தவில்லை எனினும் மரத்தால் அல்லது அலுமினியத்தால் ஆன அஞ்சறைப்பெட்டியை வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த அஞ்சறைப்பெட்டியை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது அதனை கழுவி அதில் உள்ள அழுக்குகளை நாம் நீக்க வேண்டும். அதில் சமையலுக்கு தேவையான பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் அனாவசியமாக வைக்கக்கூடாது. குறிப்பாக மருந்து, மாத்திரைகளை இந்த அஞ்சறைப்பெட்டியின் மேல் வைக்க கூடாது.

அப்படி நிறைவாக இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டியில் சோம்பு எப்பொழுதும் குறையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் சோம்புவிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம். சோம்பிற்கு அடியில் ஐந்து ரூபாய் தாளை மடித்து வைக்க வேண்டும். காயினை வைக்க கூடாது, ஏனென்றால் எண் ஐந்து என்பது குபேரனின் எண். சோம்பு என்பது மகாலட்சுமி தாயாரின் அம்சம். இவை இரண்டும் சேரும் பொழுது நமக்கு இல்லை என்று சொல்லாத வண்ணம் பணப்புழக்கம் வந்து கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

இப்படி அஞ்சறைப் பெட்டியில் சோம்பையும் பணத்தையும் மட்டும் வைத்து விட்டால் பணம் சேர்ந்து விடுமா?

ஒரு வீட்டில் ஒரு ரூபாய் வருமானம் வந்தாலும் அதில் வீண் செலவுகள் இல்லாது சிக்கனமாக செலவு செய்து அந்த பணம் கையில் தாங்கும் போது அது தான் சேமிப்பாக மாறும். அது தான் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். அப்படி வருமானம் நல்ல முறையில் வந்து நல்ல வழியில் செலவழிந்து வீண் செலவுகள் இல்லாமல் இருப்பது வீட்டில் பணம் எப்போதும் தங்கும் என்பதற்கு பொருள் தானே. இந்த பதிவில் உள்ள தகவல்கள் அனைவரும் பின்பற்றக் கூடிய மிக மிக சாதாரணமான ஒரு விஷயம் தான். இந்த ஒரு சின்ன மாற்றத்தை நாம் சமையலறையில் செய்து தொடர்ந்து கடைபிடிக்கும் போது நம் வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பணம் எப்போதும் கையில் தங்கும்.