பொதுவாக நமக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் எந்த விதமான நன்மைகள் நடந்தாலும் நம் உடனடியாக சென்று கோவிலில் இருக்கும் தெய்வத்தை வழி விட்டு வருவதை ஒரு பழக்கமாகவே வைத்து வருகிறோம். அப்படி நாம் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுதும் கோவையில் இருக்கும் அர்ச்சகர் தெய்வத்திற்கு கற்பூர ஆராதனை காண்பித்து அந்த கற்பூர ஆராதனையை நம்மிடம் கொண்டு வந்து தருவார். நாமும் மூன்று முறை அந்த ஆராதனை தொட்டு கும்பிட்டு பின் அவர் நமக்கு விபூதியையும் குங்குமத்தையும் தருவார். இப்படி அவர் நமக்கு தரும் விபூதியை நாம் நெற்றியில் பெற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்வோம்.
குறைவற்ற செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கை
இப்படி நாம் கோவில் செல்லும்போது தான் விபூதியை நெற்றிவிட்டு கொள்வோமா என்று கேட்டால் இல்லை நாம் தினசரி காலையில் நம் வீட்டிலேயே இருக்கும் தெய்வங்களுக்கு பூஜை செய்து, நாம் எப்போது எங்கு வெளியே கிளம்பினாலும் தெய்வத்தின் பிரசாதமாக அந்த விபூதியை நாம் நெற்றியில் இட்டுக் கொள்வோம். இப்படி நாம் விபூதியை நெற்றியில் இட்டு கொள்வதால் ஏகப்பட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் குறைவற்ற செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும், ஏன் அறிவியல் ரீதியான ஒரு பலனும் உண்டு ஆம் நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இப்படிப்பட்ட விபூதியை நாம் நெற்றியில் இடும்போது இந்த விரலினால் விபூதி வைக்கின்றோம் என்பதும் ஒன்று அதை பொரும்பாலும் நாம் அறிந்து கொள்வது கிடையாது.

கட்டை விரல்
நீங்கள் கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டு கெண்டால் தீராத வியாதிகள் வந்து சேரும்.
ஆள் காட்டி விரல்
நீங்கள் ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டு கொண்டால் வீட்டில் பொருட்கள் நாசம் உண்டாகும்.
நடுவிரல்
நீங்கள் நடுவிரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டு கொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியின்மை உண்டாகும்.
மோதிர விரல்
நீங்கள் மோதிர விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டு கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.
சுண்டு விரல்
நீங்கள் சுண்டு விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டு கொண்டால் உங்களுக்கு கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரல், கட்டை விரல்
அப்போ எப்படி சரியான முறையில் விபூதியை நெற்றியில் இட்டு கொள்வது என்று கேட்டால் ? உங்களது கட்டைவிரல் மற்றும் மோதிர விரலால் விபூதியை எடுத்து பின்பு உங்கள் மோதிர விரலால் விபூதியை உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இதுதான் சரியான முறை நீங்கள் விபூதியை இப்படி உங்கள் நெற்றியில் இடும் போது இந்த உலகமே உங்கள் வசமாகும், அதிர்ஷ்டமும் பணமும் வீடு தேடி வரும், ஏன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும், கையில் எடுக்கும் காரியங்களும் வெற்றியில் தான் முடியும்.



