பணத்திற்கே ஆசை வந்து உங்களிடம் பணம் சேர வேண்டுமா? இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

இன்றைக்கு ஒருவன் தன் குடும்பமான மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என தன் குடும்பத்துக்கு ஆகவே மட்டுமே ஒருவன் உழைக்கிறானா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அவன் வாழ்வில் பணத்தின் மீது ஆசை கொண்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறானா என்று கேட்டால் அதுவும் நிச்சயமாக இருக்காது. நம்மில் பலரும் அவர்களுக்கு அடுத்து வரும் சந்ததியினரும் செல்வ செழிப்புடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற மற்றொரு எண்ணத்துடன் தான் வாழ்க்கையில் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின்வரும் சந்ததியினர் அவர்கள் சேர்த்து வைத்த சொத்து சுகங்களை அனுபவிக்கும் போது அதுவே அவர்களுக்கு ஒரு நிம்மதியை கொடுக்கும்.

-விளம்பரம்-
5 Money Habits To Give Up In 2023

பணத்தை பாரமரிக்க

அந்த வகையில் நம் மூன்று தலைமுறைக்கு தேவையான செல்வங்கள் சொத்துக்களை எப்படி சேர்ப்பது என்பது பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். நாம் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பது போலவே நாம் சம்பாதித்த பணத்தை கட்டி காப்பாற்றுவது கடினமான காரியம் என்று பலரும் சொல்வார்கள். நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து சுகங்களை காப்பாதற்காக நீங்கள் பணம் வாங்கும் போதும் கொடுக்கும் போதும் ஒரு சில விஷயங்களை கடைப்பிடித்து வந்தால் போதும் நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் கையிலே தங்கம். அதனால் இந்த மூன்று விஷயங்களை மட்டும் செய்து பாருங்கள் அது என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

முதல் விஷயம்

முதலில் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் உங்கள் கைகளில் எப்ப யார் பணம் கொடுத்தாலும் அந்த பணம் எப்படி வந்தாலும் அந்த பணத்தை நீங்கள் உங்கள் கைகளால் பெற்றுக் கொள்ளும் போது. பெற்று கொண்ட அந்த பணத்தை வாங்கி உங்கள் இரு கண்களிலும் முதலில் ஒற்றி கொள்ள வேண்டும்.

இரண்டாவது விஷயம்

இரண்டாவதாக இப்படி நீங்கள் கையில் வாங்கிய பணத்தை கண்களில் ஒற்றிக் கொண்ட பிறகு அந்த பணத்தை நீங்கள் பீரோவில் வைப்பதாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டில் உள்ள பணப்பெட்டியில் இருப்பதாக இருந்தாலும் சரி, அல்லது வங்கி கணக்கில் போடுவதாக இருந்தாலும் சரி நீங்கள் வாங்கிய பணத்தை வேறு இடத்தில் வைப்பதற்கு முன்பாக “லாபம் வசி வசி” என்ற வார்த்தையை ஒரு முறை சொல்லிவிட்டு பத்திரப்படுத்துங்கள் இந்த வார்த்தையை நீங்கள் சொல்லும் போது அந்த பணம் வசியப்பட்டு நம்மிடம் நிலையாக நிற்கும்.

மூன்றாவது விஷயம்

மூன்றாவதாக நீங்கள் “லாபம் வசி வசி” என்ற வார்த்தையை சொல்லிவிட்டு பணத்தை உங்கள் வீட்டு பீரோ, பணப்பெட்டி, கல்லப்பட்டி போன்ற இடங்களில் வைப்பதற்கு முன்பாக அந்த இடம் நல்ல வாசனையை தரும் விதமாக இருக்க வேண்டும். நீங்கள் பெரும்பாலும் பணம் வைத்திருக்கும் இடத்தை மூடியே வைத்திருப்பதால். அந்த இடத்தை கெட்ட வாசனைகள் வரத் தொடங்கும் அது வராமல் தடுப்பதற்காக அந்த இடத்தில் வாசனையை தருவதற்காக நம் வீட்டில் வைத்திருக்கும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, ஜவ்வாது போன்ற எந்த பொருள் இருக்கின்றதோ அந்த பொருளை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள். இப்படி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் நல்ல வாசனையை நிலவும் பட்சத்தில் பணம் உங்களிடம் நிலையாக இருக்கும். அது போல் நீங்கள் பணம் வைக்கும் இடத்தை சுத்தமாக காலி செய்யக்கூடாது. சிறிது பணமாவது அல்லது ஒரு ரூபாய் நாணயமாவது அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here