பணம் மற்றும் அதிர்ஷடத்துடன் நல்ல வாழ்க்கை வாழ ? இந்த ஒரு தாயத்து இருந்தால் மட்டும் போதும்!

- Advertisement -

பலரும் அவர் அவர்கள் வாழ்க்கையை மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு பொருளை வாங்க நினைத்தாலும் ஓரிடத்திற்கு செல்ல நினைத்தாலும் அவர்கள் சந்தோஷத்திற்காக தடையாக இருப்பது பணமும், அதிர்ஷ்டம் இல்லாமல் போவதும் தான். ஆனால் சிலர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அவர்கள் வாழ்க்கையை பார்க்கும் பொழுது நாம் பொறாமை படாமல் இருந்தாலும் அது போன்ற வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்கும் ஒரு ஆசை இருக்கத்தான் செய்யும். அதனால் அப்படிப்பட்ட ராஜா வாழ்க்கை வாழ நமக்கு ஆன்மீகத்தில் ஒரு வழி உள்ளது அதைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

தேவையானவை

இப்படி நாம் மன நிம்மதியுடன், சந்தோசமாகவும் நமது வயதுக்கு தேவையான மதிப்போடு வாழ்வதற்காகவும். இந்த ஒரு தாயத்தை தயார் செய்து உங்கள் கழுத்தில் அல்லது இடுப்பிலோ கட்டிக் கொண்டால் கண்டிப்பாக நீங்களும் ராஜ வாழ்க்கை வாழலாம். இந்த தாயத்தை நாமே செய்துவிடலாம் இதற்காக உங்களுக்கு தேவைப்படும் நான்கு பொருட்கள் மட்டுமே வெள்ளி தாயத்து, சிவப்பு நிற கயிறு, கொத்தமல்லி வேர் மற்றும் தர்பை புல் இந்த தர்ப்பை புல் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் நீங்கள் அங்கு வாங்கிக் கொள்ளலாம். சரி, வாருங்கள் தாயத்து எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

குல தெய்வம்

முதலில் கொத்தமல்லியின் வேர் பகுதியை வெயிலில் காய வைத்து நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வெள்ளி தாயத்தின் அளவுக்கு உடைத்துக் கொள்ளுங்கள் இதை கைகளால் மட்டுமே உடைக்க வேண்டும் கத்திரிக்கோல், கத்தி போன்றவை உபயோகப்படுத்த கூடாது. இதனுடன் தர்பை புல்லையும் சேர்த்து அந்த அளவு எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒரு நூலில் ஒன்றாக கட்டி. நாம் வைத்திருக்கும் தாயத்துக்குள் போட்டு கொள்ளுங்கள். பின் அந்த வெள்ளி தாயத்தை ஒரு சிவப்பு நிற கயிற்றில் கட்டி உங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விரும்புகிறீர்களோ அதை மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

ராஜ வாழ்க்கை தேடி வரும்

இப்படி பூஜை அறையில் வைத்து பூஜை செய்த தாயத்தை எடுத்து உங்கள கழுத்துப் பகுதியிலோ அல்லது இடுப்பு பகுதியிலோ கட்டிக் கொள்ளுங்கள். இந்த தாயத்தை நீங்கள் அணிந்து ஒரு மண்டலத்தில் உங்களுக்கு அதற்குண்டான பலனை கொடுக்க ஆரம்பித்து விடும். அதை நீங்களே படிப்படியாக உணர ஆரம்பித்து விடுவீர்கள். அதன் பின் சமுதாயத்தில் அனைவரும் உங்களை மதிப்பார்கள். உங்களின் வயது ஏற்ற சந்தோஷம் உங்களை வந்து சேரும். படிப்படியாக உங்களிடம் உள்ள பணம் உயரும். உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்தால் அது தான் கடன் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் இப்படியாக உங்களை ஒரு ராஜா வாழ்க்கை வாழ வைக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here