- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் திட்டம் உள்ளதா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட, அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி உள்ளதா? அப்படியானால் தக்காளியை கொண்டு தக்காளி கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.
ஒரு முறை இந்த சுவையான தக்காளி கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம். இந்த தக்காளி கிரேவியை செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், ஒரு கப் தக்காளி இருந்தால் போதும் இந்த கிரேவியை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். இந்த தக்காளி கிரேவியுடன் சோறு உண்டு கை கழுவிய பிறகு வீசும் கை மணம் இன்னொரு முறை சோறு உண்ண தோணும். மேலும், இந்தக் கிரேவியை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். இந்த கிரேவி நல்ல ஒரு அசைவ குழம்பு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். மண் வாசனையுடன் கூடிய தக்காளி கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதனையும் படியுங்கள் : எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!
Ingredients
Method
முதலில் தக்காளியை தண்ணீரில் அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
ஒரு பவுளில் அரிசி மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து தக்காளியில் ஊற்றி கொதிக்க விடவும்.
தக்காளி நன்கு வெந்து, கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி தழை, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி கிரேவி தயார்.






