Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி கிடையாது ஆனால் ஒரு சிலர் நிச்சயமாக பொறாமைப்படுவார்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழி உண்மைதான். ஒருவருடைய தீய கண் பார்வை ஒருவர் மீது படும்போது அவர்களுக்கு எதன் மூலம் ஆவது பிரச்சனைகள் நேரிடும். தீய கண்பார்வை மிகவும் கொடியது. ஒருவர் நம்மை நல்ல எண்ணத்தோடு பார்ப்பதற்கும் தீய எண்ணங்களோடு பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

-விளம்பரம்-

திருஷ்டி கழிக்க உபயோகப்படுத்தப்படும் சில பொருட்கள்

தீய எண்ணங்களோடு நம்மை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கும்போது கண் திருஷ்டி கண்டிப்பாக ஏற்படும். அப்படி கண் திருஷ்டி ஏற்படும்போது அதனை கழிப்பதற்கு வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். கண் திருஷ்டி கழிப்பதற்கு சூடம், காய்ந்த மிளகாய், கடுகு, எலுமிச்சை பழம் உப்பு, தேங்காய், பூசணிக்காய் என பல பொருள்களை பயன்படுத்துவது வழக்கம். இது போன்ற பொருட்களை வைத்து திருஷ்டி கழிக்கும் போது ஒரு சில மந்திரங்களை சொல்லி திருஷ்டி கழித்தால் எப்படிப்பட்ட திருஷ்டியாக இருந்தாலும் அது கழிந்து விடும். அந்த மந்திரங்களை பற்றி பார்க்கலாம்.

திருஷ்டி கழிக்கும் போது கூற வேண்டிய மந்திரங்கள்

காய்ந்த மிளகாய் கொண்டு திருஷ்டி கழிக்கும் போது கூற வேண்டிய மந்திரம்

ஒருவருக்கு திருஷ்டி பட்டிருக்கிறது என்றால் அவர்களை உட்கார வைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் காய்ந்த மிளகாய் உப்பு கடுகு மூன்றையும் சேர்த்து அவர்களின் தலையைச் சுற்றி மூன்று முறை இடது புறமாகவும் மூன்று முறை வலது புறமாகவும் சுற்று அதனை தீயில் போட்டு எரிப்பார்கள். அப்படி தலையை மூன்று முறை சுற்றும் போது இந்த மந்திரத்தை கூறினால் திருஷ்டி கழிந்து விடும்.

“பாம்பு கண்ணு பல்லி கண்ணு பல்லியோட போபேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போபிச்சை கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ”

-விளம்பரம்-

திருஷ்டி கழிக்கும் போது இந்த மந்திரத்தை கூறி திருஷ்டி கழித்து விட்டு அதனை தீயில் போட்டு விட்டால் திருஷ்டி கழிந்து விடும்.

எலுமிச்சை பழம் வைத்து திருஷ்டி கழிக்கும் போது கூற வேண்டிய மந்திரம்

வீட்டில் உள்ள ஒரு சில பொருட்கள் திருஷ்டி கழிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் அந்த வகையில் எலுமிச்சை பழத்தை வைத்தும் திருஷ்டி கழிப்பார்கள். அப்படி எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி கழிக்கும் போது இந்த மந்திரத்தை கூறுவது நல்லது

“மஞ்சள் வர்ண புளித்த மாரிரத்த வீர ராசா கன்னிமனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா வா”

-விளம்பரம்-

இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு எலுமிச்சை பழத்தை வைத்து மூன்று முறை இடது பக்கமாகவும் மூன்று முறை வலது பக்கமாகவும் சுற்று விட்டு அதனை நான்காக நறுக்கி குங்குமம் வைத்து வாசலில் நின்று நான்கு திசைகளிலும் போட்டு விட்டால் திருஷ்டி கழிந்து விடும்.

இதனையும் படியுங்கள் : தினமும் அரை மணி நேரம் இந்த மந்திரம் சொன்னால் மட்டும் போதும் பணம் தானாகவே வீடு தேடி வரும்!