உங்களால் திருப்பி கொடுக்கவே முடியாத கடன் தீர்ந்து பணம் சேர உப்புடன் சேர்த்து இந்த இரண்டு பொருட்களை மட்டும் வைத்தால் போதும்!

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பணம் வீட்டில் தங்கவே தங்காது. அதே போல் தான் சிலர் பிரச்சனைகளில் சமாளிக்க முடியாமல் பிரச்சனையிலேயே மூழ்கி விடுவார்கள்.

-விளம்பரம்-

பொதுவாக பலருக்கு தீராத கடன் பிரச்சனை இருக்கும். மாதம் மாதம் சம்பாதிக்கும் பணத்தில் பாதி கடனுக்கே செலவிடுகிறோம். எப்படி சமாளிப்பது என்று பலரும் யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். கடன் தொல்லை நீங்க கல்லுப்பு பரிகாரம் மிகசிறந்த ஒன்றாகும். கஷ்டங்களை கொடுக்கும் கடனை கூட மிக எளிதாக கரிக்கக்கூடிய ஆற்றல் கல் உப்பிற்கு உள்ளது. இந்த ஆன்மீகப் பதிவில் பலன்‌ தரும் உப்பு பரிகாரத்தினை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சம் உப்பு

மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு கைப்பிடி உப்பினை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தகைய சக்தி வாய்ந்த இந்த உப்பை வைத்து பரிகாரத்தை மேற்கொள்ளும் போது உங்களுக்கான பிரச்சினையை தீர்க்கும், வறுமை விலகும். உங்களின் கடனை விரைவில் அடைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முந்தைய காலத்தில் இருந்த வீட்டில் நாம் கல் உப்பு இல்லாத வீட்டையே பார்க்க முடியாது ஆனால் இப்போது எல்லோரும் சால்ட் உப்பை தான் அதிகம் விரும்புகிறார்கள். கடலில் குடிகொண்டிருக்கும் நாராயணர் மற்றும் மகாலட்சுமியின் அம்சமாக சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்படும் உப்பு பார்க்கப்படுகிறது. எனவே இந்த பொருளை எப்போதும் வீட்டில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

உப்பு பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான்‌ தொடங்க வேண்டும். வேறு நாட்களில் இந்த பரிகாரத்தை பண்ண கூடாது. இந்த பரிகாரம் செய்வதற்கு உப்பு, வசம்பு மற்றும் விரலி மஞ்சள் மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக விரலி மஞ்சள் பல நன்மைகளை தரும் இது உப்புடன்‌ சேரும் போது பணத் தடைகள் அனைத்தும் நீங்கி பண வரவை அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இந்த பரிகாரம் செய்ய ஒரு கண்ணாடி பௌல் அல்லது டம்ளரில் கல் உப்பை போட்டு, அதில் மஞ்சள் மற்றும் வசம்பை சொருகி, வீட்டின் பூஜை அறை, சமயலறை மற்றும் எந்த மூலையில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் இந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. இந்த உப்பை 48 நாட்களுக்கு அப்படியே வைத்து விடுங்கள். ஒரு மண்டலம் முடிந்தவுடன் இதனை தண்ணீரில் கரைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் பணம் அதிகம் சேரும். மேலும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். ஒரு மாதம் முழுவதும் உங்கள் கையில் பணம் அதிகம் புரள வேண்டுமானால், அதற்கு இந்த உப்பு பரிகாரம் பெரிதும் உதவி புரியும்.