குபேரரை போல் ஒரு பணக்காராக இருக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்!

- Advertisement -

இந்த உலகில் உள்ள ஒட்டு மொத்த செல்வங்களுக்கும் அதிபதியாக இருப்பவர் குபேரர் மட்டுமே அவரிடம் இல்லாத செல்வங்களும் இல்லை ஐஸ்வர்யங்களும் இல்லை. அப்பேர்ப்பட்ட குபேரரை போல நீங்களும் பணக்காரராக, அதீத செல்வங்களுடன் அதிபதியாக வாழ்க்கையை வாழ வேண்டுமா ? அப்போது இந்த ஒரு பொருளை வைத்து உங்கள் வீட்டில் தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தாலே போதும் நீங்களும் குபேரர்கள் போல் செல்வ செழிப்புடன் வாழலாம். அது என்ன பொருள் என்பதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வலம்புரி சங்கு

சாஸ்திரங்கள் சொல்வது படி பெரும்பாலான கடவுள்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் வலம்புரி சங்கை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து தினசரி பூஜை செய்து வழிபட்டு வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் எப்பேற்பட்ட தோஷங்களும் நீங்க செல்வ வளம் அதிகரிக்கும். இப்படி இந்த வலம்புரி சங்கை நம் வீட்டில் வைத்து பூஜை செய்வதன் மூலம் மேலும் ஒரு நன்மை என்றால் அது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் அதனால் நம் வீட்டிலேயே மகாலட்சுமி வாசம் செய்வாள்.

- Advertisement -

48 நாள் பூஜை

இப்படி தினமும் வலம்புரி சங்கை உங்கள் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் இந்து புராணங்கள் சொல்லும் தோஷங்களில் கடுமையான தோஷமான பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கும். இது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள் நீங்குவதற்கு வலம்புரி சங்கில் மஞ்சள் துளசி கலந்து நீரை காலை வேளைகளில் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெளித்து வந்தால். வாஸ்து சம்பந்தப்பட்ட தோஷங்கள் நீங்கிவிடும். இவ்வளவு மகத்துவம் வாய்ந்த வலம்புரி சங்கை 48 நாட்கள் உங்கள் வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வந்தால் சொந்தமாக தொழில் செய்து வருபவர்களும் அல்லது ஏதேனும் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தாலும் அதன் மூலமாக உங்கள் வீட்டில் பண புழக்கம் அதிகரித்து சகல செல்வங்களுடன் வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here