வலம்புரி விநாயகரை வழிபடும் முறையும், வழிப்படும் போது செய்ய கூடாதவையும்!

- Advertisement -

கடவுள்களுக்கு எல்லாம் முதன்மையானவர் விநாயகர் நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பு விநாயகரை வழிபட்டு அந்த காரியத்தை தொடங்கினால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.. அனைத்து விக்னகங்களையும் தீர்க்கக் கூடியவர் விநாயகர். அதிலும் வலம்புரி விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது . விநாயகரில் வலம்புரி இடம்புரி உண்டா என்று சிலர் கேட்பார்கள் ஆம் விநாயகரில் வலம்புரி இடம்புரி என்று இரு முகர் உண்டு. விநாயகரின் உருவச் சிலையின் அவரது துதிக்கை வலது புறம் பக்கமாக இருந்தால் இவரை வலம்புரி விநாயகர் என்றும் இடது புறமாக துதிக்கையை திரும்பி இருந்தால் அவரை இடம்புரி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறோம். வலம்புரி விநாயகரை வழிபட்டால் ஞானமும் செல்வமும் ஆரோக்கியமும் அதிக அளவில் கிடைக்கும். இப்படி வலம்புரி விநாயகரை வழிபடும் பொழுது மறந்தும் சில தவறுகளை செய்து விடக் கூடாது. இவ்வாறு வலம்புரி விநாயகரை வழிபட என சில முறைகள் இருக்கின்றன. அவ்வாறு அவரை வழிப்பட்டால் நாம் வேண்டியவைகளை வேண்டியவாரே அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக மாறிவிடுவார் நம் விநாயகர்.

-விளம்பரம்-

வலம்புரி விநாயகர்

ஓங்காரத்தின் வடிவமாக காட்சி கொடுக்கக் கூடியவர் விநாயகர். மகாபாரதம் எழுத ஒற்றை கொம்பை முறித்து ஒற்றை கொம்பனாக அவர் காட்சியளிக்கின்றார். விநாயகரின் வடிவத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அப்படி வலம்புரி விநாயகரை வழிபடுவதால் அதிர்ஷ்டம், புத்தி கூர்மை, செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி போன்றவை கிடைக்கின்றன. விநாயகரின் சித்தி புத்திகளுக்கு நடுவில் அமர்ந்திருப்பார். சித்தியை வழிபடுவதால் அறிவாற்றலும், புத்தியை வழிபடுவதால் செல்வ செழிப்பும் கிடைக்கும். வலது புறத்தில் இருக்கும் சித்தியை வழிபடுவதால் பல வெற்றிகள் வந்து சேரும் . ஆகையால் இரை சித்தி விநாயகர் என்றும் அழைக்கின்றனர். இப்படி வலம்புரி விநாயகரை வழிபடும் பொழுது எந்தெந்த தவறுகளை நாம் மறந்தும் செய்து விடக் கூடாது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

வலம்புரி விநாயகரின் அமைப்பு

எப்படி சங்கில் வலம்புரி இடம்புரி என்று இரண்டு சங்குகள் உள்ளனவோ அதில் எப்படி வலம்புரி சங்கு அதிக விசேஷமானதாக இருக்கிறதோ அதேபோலவே விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலையிலும் வலம்புரி இடம்புரி என்று இருக்கின்றன. விநாயகப் பெருமானின் துதிக்கையானது இடது புறமாக வளைந்து இருந்தால் அவர் இடம்புரி விநாயகர் எனவும் விநாயகப் பெருமானின் துதிக்கையானது வலது புறமாக திரும்பியிருந்தால் அவர் வலம்புரி விநாயகர் எனவும்  அழைக்கப்படுகிறார்கள். இப்படி வலம்புரி விநாயகர் வலது புறமாக இருப்பவர் சித்தி இவர்களை வணங்குவதால் நமக்கு அறிவு ஆற்றல் மேலோங்கிக் கிடக்கின்றது.

வலம்புரி விநாயகரின் சிறப்புகள்

வலம்புரி விநாயகர் வடிவமானது பிங்கல நாடியை குறிப்பதாகும். இது சூரிய சக்தியை குறிப்பதாகும். வலது துதிக்கை வழியாக சூரிய சக்தி பாய்வதால் இந்த விநாயகர் பிரம்மா, விஷ்ணு, சிவனின் அவதாரங்களாக கருதப்படுகிறார். இந்த அவதாரமானது கோடி கோடி சூரியங்களின் சக்திக்கு இணையானதாகும். பிங்கல நாடி என்பது மனிதனின் வலது புற நரம்பு மண்டலத்தோடே தொடர்புடையதாகும். இந்த பிங்கல நாடி மனதின் அதீத ஞானத்தை கட்டுப்படுத்த கூடியது. ஒருவரது மனதின் ஆசைகளை நிறைவேற்றக்கூடியது. ஆகையால் இவரை முறையாக பூஜித்து தூய்மையாக பராமரித்தல் வேண்டும். இந்த வலம்புரி விநாயகர் வடிவம் நெருப்பு சக்தி ஆகும். ஆகையால் வலம்புரி விநாயகரை மந்திரங்கள் மூலம் பூஜித்தல் வேண்டும்.

வலம்புரி விநாயகர் வழிபாட்டில் கவனிகக் வேண்டியவை

-விளம்பரம்-
  1. வலம்புரி விநாயகரை தூசி படிய விடக்கூடாது. தினமும் சுத்தமான நீரால் கழுவி அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த மிகவும் முக்கியமான ஒரு வழிபாட்டு முறையாகும்.

2 . வலம்புரி விநாயகரில் சூரியனின் அதிக ஆதிக்கம் அதிகரித்து காணப்படும். ஆகையால் இந்த வலம்புரி விநாயகருக்கு வேத ஆகம முறைகளின் படி பூஜைகள் செய்து வழிபடாமல் விட்டால் வலம்புரி விநாயகரை வழிப்படுவதால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் அனைத்தையும் சூரியனின் கடும் பார்வை தடுத்துவிடும். ஆகையால் வலம்புரி விநாயகர் பூஜைகள் முறையாக வேதாகம நூல்களின்படி நடைபெறுதல் முக்கியம்.

  1. வலம்புரி விநாயகருக்கு சந்தன காப்பு சாற்றி வழிபடுதல் மிகவும் விசேஷம். காரணம் சூரியனின் ஆதிக்கம் இருப்பதால் அவரை குளிர்விக்க சந்தனகாப்பு சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
  2. விநாயகர் வழிபாட்டில் சாற்றப்படும் பூ, அருகம்புல், மாலை, வஸ்திரங்கள் போன்றவற்றை தினமும் மாற்றி விட வேண்டும். விநாயகர் வழிபாடு பயன்படுத்தப்படும் குந்த வஸ்திரங்களை சுத்தமான நீரில் கழுவி விநாயகருக்கு சாற்றி வழிபடுதல் வேண்டும்.
  3. தினம் விநாயகரின் வழிபாட்டிற்கு புதிய மாலை, அருகம்புல்,மலர்கள் வஸ்திரங்களை சாற்றி வழிபடுதல் முக்கியமான ஒன்றாகும்.
  4. வலம்புரி விநாயகருக்கு வாசனையான தூப தீபங்களுடன் நெய் விளக்கேற்றி வழிபடுவது நம் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி கொடுக்கும் .
  5. விநாயகப் பெருமானுக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் பாடி விநாயகர் பெருமானை வழிபடுதல் வேண்டும்.
  6. விநாயகப் பெருமானுக்கு பிடித்த வெல்லம் , மோதகம், சுண்டல், லட்டு அல்லது கொழுக்கட்டை போன்றவற்றை வைத்து வழிபடுதல் வேண்டும் ஒவ்வொரு பிரசாதத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு .
  7. நாம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் தொடர்பு உண்டு ஆகையால் பிரசாதமாக ஒரு பொருளை வைப்பதற்கு முன்பு அந்த பொருளை செய்வதற்கு மிகவும் சிரத்தை எடுத்து கவனமாக செய்த பின்பு இறைவன் முன்பு வைத்து பூஜித்து வழிபட வேண்டும்.

விநாயகர் வழிபாட்டு மந்திரங்கள்

  1. “ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ” – எந்த ஒரு காரியத்தை துவங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி விநாயகரை வணங்கி விட்டு துவங்கினால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இந்த விநாயக மந்திரத்தை பள்ளி மாணவர்கள் தினமும் கூறி வலம்புரி விநாயகரை பூஜித்தால் கல்வி அறிவு உயரும்.
  2. “ஓம் கம் கணேசாய நமஹ” – இந்த மந்திரம் எப்படிப்பட்ட தடையாக இருந்தாலும் அவற்றை தகர்த்தெரிய கூடிய சக்தி வாய்ந்ததாகும். இந்த மந்திரத்தை தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கூறினால் அவர்களுக்கு வரும் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து மேலும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  3. ஓம் வக்ரதுண்டாய நமஹ
    ஓம் ஏகதந்தாய நமஹ
    ஓம் கிருஷ்ணபிங்கக்ஷாய நமஹ
    ஓம் கஜவக்ராய நமஹ
    ஓம் லம்போதராய நமஹ
    ஓம் விகடாய நமஹ
    ஓம் விக்ன ராஜாய நமஹ
    ஓம் தும்ரவர்னாய நமஹ
    ஓம் விநாயகாய நமஹ
    ஓம் கஜபதயே நமஹ
    ஓம் பாலசந்திராய நமஹ
    ஓம் கஜானனாய நமஹ

இந்த 12 சக்திவாய்ந்த மந்திரங்களையும் தினமும் பக்தி சிரத்தையோடு சொல்லி வந்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், எதிரிகள் சரணடைவார்கள். இவை நம்முடைய ஆத்மாவை சுத்தம் செய்து, தெய்வீக சக்தியை ஈர்க்கக் கூடியதாகும். அனைத்து தீய சக்திகள், வினைகளில் இருந்தும் இது நம்மை கவசம் போல் காக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறக்கூடிய வலம்புரி விநாயகரை இம்மந்திரங்கள் கொண்டு பூஜித்தால் அவர் நமது உள்ள விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இல்லத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுத்து வாழ்வில் வளங்களையும் செல்வங்களையும் ஆரோக்கியங்களையும் கொடுத்த நம்மை வாழ்வாங்கு வாழ வைப்பார்.