Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க இதை செய்யுங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச்...

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க இதை செய்யுங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச் செல்லும்!

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச் செல்லும் என்பது நம்பிக்கை. தெய்வீக சக்தி நம்மை சுற்றி நிறைந்திருக்கிறது என்பது சில அறிகுறிகள் அவைகள் நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் நாம் தான் அவற்றை புரிந்து கொள்வது இல்லை. அப்படி இல்லை என்றால் தவறாக புரிந்து கொள்கிறோம். என்னதான் பூஜை செய்தாலும் எந்தவித பலனும் இல்லை, செய்யும் காரியங்களில் தடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நல்ல பலன்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் எந்த பூவை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

தெய்வ சக்தி அதிகரிக்க செய்ய வேண்டியவை

ஒரு நாளைக்கு இரண்டு முறை, அதாவது காலை, மாலை இரு வேளையிலும் நீங்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்பொழுது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மெல்ல மெல்ல மறைவதை நீங்கள் காணலாம்.

வீட்டு பூஜை அறையில் கண்ணாடியை வைத்திருந்தால் தெய்வீக சக்தி அதிகரிக்குமாம். கண்ணாடிக்கு தெய்வ சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

தண்ணீர் இல்லாமல் பூஜை நிறைவு பெறாது. பூஜை அறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது அவசியம்.

வீடு எப்பொழுதும் நறுமணமாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழைந்தாலே நல்ல ஒரு நறுமணம் வீசினால் அங்கு தெய்வ சக்தி அதிகரிக்கத் துவங்குமாம்.

-விளம்பரம்-

பூஜை அறையில் எத்தனை விளக்குகள் வைத்திருந்தாலும், அகல் விளக்கிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எனவே பூஜை அறையில் அகல் விளக்கு ஒன்றையாவது ஏற்றி வழிபட வேண்டும்.

வீட்டின் முன் விநாயகர் சிலை இருப்பது வாஸ்து குறைகளை போக்குவதோடு வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் காக்கிறது.

பூஜை அறையில் கோமாதா படத்தை வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் சுபீட்சம் பெருகும்.எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கிருந்து மண் எடுத்துவந்து வீட்டில் பூஜை செய்யுங்கள். அதன் மூலம் தெய்வ சக்தி அதிகரிக்கும்.‌

-விளம்பரம்-

வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு ஜவ்வாது மற்றும் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து அதன்மேல் செந்தாமரை மலரை விரித்து வைத்து விடுங்கள். பின் இந்த கண்ணாடி பாத்திரத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின் வீடு முழுவதும் தூபம் போடுங்கள். இந்த கண்ணாடி பாத்திரத்தை வரவேற்பரையிலோ அல்லது நிலை வாசலிலோ வைக்க கூடாது. இந்த பரிகாரத்தை நாம் செய்யும் போது ஜவ்வாது மற்றும் பச்சை கற்பூர வாசத்திற்கு எதிர்மறை ஆற்றல்கள் விலகி உங்களுடைய வீட்டை தேடி தெய்வ சக்தி வரும். இதோடு மட்டுமல்லாமல் இந்த கலவையை ஒரு சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி நிலை வாசல் படியில் மாட்டி வைத்தால் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

இந்த எளிய பரிகாரத்தை வாரந்தோறும் உங்கள் வீட்டில் கடைபிடித்து வாருங்கள். இதனை நீங்கள் கடை பிடித்து வந்த சில நாட்களிலே பணம் சம்பந்தமான பிரச்சினைகள், வாஸ்து குறைபாடுகள், எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் விலகி உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும்.

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமியின் அருளும், செல்வமும் வீட்டில் பெருக துளசியை மட்டும் இப்படி வழிபடுங்கள் போதும்!