- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது. வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். நீங்கள் நகரத்தில் இருந்தாலும் சரி, கிராமங்களில் கிடைக்கக்கூடிய அதே சுவையில் ஒரு கலக்கலான மீன் குழம்பை செய்ய முடியும். இதை செய்து சுவைத்து பாருங்கள் அமிர்தமே தோற்று விடும்!
இந்த மீன் குழம்பு செய்வதற்கு வஞ்சரம் மீன்களை பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். எவ்வளவுதான் வகை வகையாக மீன்கள் இருந்தாலும் வஞ்சரம் மீன் என்றால் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். அதனால் வீடே கமகமக்கும் சுவையான கிராமத்து ஸ்டைலில் வஞ்சரம் மீன் குழம்பு எப்படி வைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். நீங்க உங்க வீட்ல ஒரு மாதிரியான முறையில் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இப்போ நம்ம வைக்கப் போற இந்த கிராமத்து ஸ்டைல் வஞ்சரம் மீன் குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும். உங்க வீட்ல ஒரே ஒரு தடவை இந்த மாதிரியான முறையில் செஞ்சு பாருங்க மீன் குழம்பை வேணாம்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க.
இதனையும் படியுங்கள் : சத்தான சுவையான மீன் சூப் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!
Ingredients
Method
முதலில் மீனை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து விட்டு, துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பூண்டு, வர மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லி தூள், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இது நன்கு கொதித்ததும் உப்பு மற்றும் வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
மீன் நன்கு வெந்து பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் வஞ்சரம் மீன் குழம்பு தயார்.






