48 நாட்கள் இந்த பூஜை செய்து இந்த மாலையை அணிவித்தால் மனதில் நினைத்தது நடக்கும்!

- Advertisement -

பொதுவாக நாம் மனதில் நினைத்த வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்தமான பூவில் அல்லது பொருட்களில் மாலை செய்து அணிவித்தால் நாம் நினைத்து நடக்கும். அப்படி முழு நம்பிக்கையோடு மகாலட்சுமியை வேண்டி வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த மாலையை மகாலட்சுமிக்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வேண்டுதல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை 48 நாட்களுக்குள் நிறைவேற்றி தரும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

-விளம்பரம்-

எப்படி வேண்டி கொள்ளலாம்

உங்கள் வீட்டில் கல்யாண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க, குழந்தைகள் நன்றாக படிப்பதற்கும், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கும், நல்ல கணவனோ அல்லது மனைவியோ கிடைக்க, கடன் பிரச்சனை தீர, உங்கள் வருமானம் உயர்வதற்கு இது போன்று எந்த வேண்டுதலாக இருந்தாலும் மகாலட்சுமியை வேண்டி முழு நம்பிக்கையுடன் 48 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும்.

- Advertisement -

விராலி மஞ்சள் அர்ச்சனை

இந்த பரிகாரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு நன்கு சுத்தமா உங்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமி தாயாருக்கு இரண்டு ஏலக்காய்களை நிவேதியமாக வைத்து விட்டு பின்பு 48 விரலி மஞ்சள் எடுத்து கொண்டு அதில் ஒவ்வொன்றாக எடுத்து மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள். இந்த அர்சனை எப்படி செய்ய வேண்டும் என்றால் குங்குமத்தை தெய்வத்தின் பாத்தில் வைத்து அர்ச்சனை செய்வது போலவே விரலி மஞ்சளையும் எடுத்து மகாலட்சுமின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்யுங்கள். அப்படி ஒவ்வொரு மஞ்சளையும் எடுத்து மகாலட்சுமியின் பாதத்தில் வைக்கும் போதும் உங்கள் வேண்டுதலை சொல்ல வேண்டும்.

விராலி மஞ்சள் மாலை

பின்பு விரலி மஞ்சள் அர்ச்சனை முடிந்த உடன் மகாலட்சுமிக்கு கற்பூரத்தை ஏற்றி ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்யுங்கள். அதன் பின் பூஜையை முடிந்து சிறிது நேரம் கழித்து மகாலட்சுமின் பாதத்தில் அர்ச்சனை செய்த விரலி மஞ்சளை ஒரு தாம்பூல தட்டில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் இந்த விரலி மஞ்சளால் 48 நாட்கள் மேல் தினமும் உங்கள் வேண்டுதலை சொல்லி மகாலட்சுமிக்கு விரலி மஞ்சள் அர்ச்சனை செய்ய வேண்டும்.

48 வது நாள் பூஜை

இப்படி 47 நாள் பூஜை செய்து 48 நாள் பூஜையின் போது நெய், ஏலக்காய், முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்டை சேர்த்து பால் பயாசம் செய்து 48 வது நாள் பூஜையை நிறைவேற்றி கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் 48 நாட்கள் நாம் பூஜை செய்த விராலி ஒரு மஞ்சளை கயிற்றில் மாலையாக செய்து பெருமாள் கோவிலில் இருக்கும் மகாலட்சுமிக்கு இந்த மாலையை போடுங்கள். இந்த மாலையை மகாலட்சுமிக்கு அணிவித்த ஒரு சில நாட்களில் நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here