விதவிதமான சட்னி வகைகளில் இந்த கருணை கிழங்கு சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது.உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம் உள்ளன , கிழங்கு வகைகளில் கருணை கிழங்கு முக்கியமானது.
உருளைக்கிழங்கு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், அதில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்டது கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவு பவை.
வேக வைத்த கருணைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் இந்த சட்னி வைத்து கொடுத்தால் எவ்வளவு இட்லி, தோசைகளை வேண்டுமானாலும் நாம் சாப்பிடலாம். அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த கருணைக்கிழங்கு சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.
கருணைக்கிழங்கு சட்னி | Yam Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- கருணைக்கிழங்கை
- சமையல் எண்ணெய்
- பெரிய தக்காளி
- உளுத்தம் பருப்பு
- வர மிளகாய்
- பச்சை மிளகாய்
- புளி
- இஞ்சி
தாளிக்க
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் உளுந்து
- 1 இணுக்கு கறிவேப்பிலை
- மல்லித்தழை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கருணைக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கருணை கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் வெங்காயம், தக்காளி என்று தேவையான எல்லா பொருட்களையும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.
- அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.
- அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்துலேசாக வதக்கி விடுங்கள். பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் கழுவி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
- மீதமிருக்கும் எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி, வெங்காயம் வதங்கி வந்ததும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின்னர் ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சித் துண்டை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி வதங்க சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள், சீக்கிரம் வதங்கும். பிறகு இதனுடன் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கருணைக்கிழங்கு சேர்க்க வேண்டும்.
- பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை அல்லது புதினா தழை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். இந்த பொருட்களெல்லாம் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.
- பிறகு மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.
- தாளிக்க ஒரு கரண்டியை வைத்துக் கொள்ள தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறினால் சுடச்சுட இட்லி, தோசை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், அவ்வளவு ருசியாக இருக்கும், இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.