- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேனைக்கிழங்கு இருக்கிறது. சேனைக்கிழங்கு நம்முடைய ஊர்களில் எங்கு பார்த்தாலும் கிடைக்கும். இவை பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளன. பெரும்பாலான வீட்டில் வாரத்திற்கு ஏழு நாட்களில் ஓரிரு நாள் தான் அசைவம் இருக்கும், மற்ற நாட்களில் சைவம் தான் அதிலும் குறிப்பாக இரண்டு நாளில் சாம்பார், புளி குழம்பு கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள்.
எப்போதும் ஒரே போன்ற சாம்பார், ரசம் என வைத்து சலித்துப்போனவர்களுக்கு சேனை குழம்பு சரியான ஆப்ஷன். அதிலும் சேனைக்கிழங்கு சேர்த்து செய்யும்போது அதன் சுவையே தனியாக இருக்கும். புளிப்பு, இனிப்பு மற்றும் காரம் அனைத்தும் சேர்ந்து தனித்துவமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபியை இனி பார்க்கலாம். குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது. அதிலும் சேனைக்கிழங்கு குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல இருக்கும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதோடு பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.
Ingredients
Method
முதலில் சேனைக்கிழங்கை தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளியுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் அதில் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
குழம்பு பச்சை வாசனை போனவுடன் வேகவைத்துள்ள சேனைக்கிழங்கை அதில் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சேனைக்கிழங்கு குழம்பு தயார்.






