நம் உடலில் பல அற்புதங்கள் புரியும் முருங்கைக்கீரை பற்றி தெரியுமா ?

- Advertisement -

முருங்கைக்கீரை… ரொம்ப சாதாரணமா கிடைக்கக்கூடிய கீரை இது.ஆனா இதுல நிறைய சத்துகள் இருக்கு. முக்கியமா இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமா இருக்கு. வெறும் கீரையா இல்லாம முருங்கைப்பூவையும் சேர்த்துச் சமைச்சி சாப்பிட்டு வந்தா உடல் பலம் அதிகரிக்கும். அதுமட்டுமில்ல எலும்புகளும், பற்களும் நல்லா வலிமை அடையும். கண் கோளாறுகள், பித்தம் சம்பந்தமான நோய்கள்ல இருந்து நிவாரணம் பெற்று தரக்கூடியது முருங்கைக்கீரை.

-விளம்பரம்-


உடல் வலி போக்கும்


கீரை மட்டுமில்ல அதோட ஈர்க்கும்கூட மருத்துவகுணம் உண்டு. வாரத்துல ஒருநாள் முருங்கைக்கீரையை உணவுகள்ல சேர்த்துட்டு வந்தா நிறைய பிரச்சினைகள் சரியாகும். முக்கியமா வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முருங்கைக்கீரை நல்லது. பொரியல், கூட்டு மட்டுமில்லாம சூப் செஞ்சும் சாப்பிடலாம். இந்தமாதிரி சாப்பிட்டு வந்தா சாதாரண தலைவலி, இருமல், சளித்தொல்லைகள்ல இருந்து விடுபடலாம். காரணம் இந்தக்கீரையில நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கு. உடம்பு வலி வந்தா இந்த முருங்கைக்கீரையை ரசம் இல்லன்னா சூப் வச்சி குடிச்சா போதும்.

- Advertisement -


வாய்வுக்கோளாறு போக்கும்


குழந்தை பெற்ற தாய்மாருக்கு முருங்கைக்கீரை ரொம்ப நல்லது. முக்கியமா தாய்ப்பால் ஊற முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தாலே போதும். இந்தக்கீரையை சாப்பிடுறதால தாய்மாருக்கு மட்டுமில்லாம குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். அதாவது வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டா அது பால் குடிக்கிற குழந்தைகளையும் பாதிக்கும். முக்கியமா குழந்தைகளோட வயிறு கல் மாதிரி வீங்கி உப்பிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுத்தும், மூச்சுத் திணறலையும் உண்டாக்கும். இந்த மாதிரி நேரங்கள்ல முருங்கைக்கீரை ரொம்ப உதவியா இருக்கும்


சிறுநீர்க்கட்டு உடைக்கும்


கைப்பிடி முருங்கைக்கீரையை எடுத்து கசக்கி சாறு பிழிஞ்சி கல் உப்பு சேர்த்து கரைக்கணும். அதோட வெந்நீர் சேர்த்து ஒரு பாலாடை (சங்கு) அளவு குழந்தைக்கு கொடுத்தா போதும். வாய்வு விலகி அழுத குழந்தை சமாதானமாயிரும். பிரச்சினை அதிகமா இருந்தா முருங்கைக்கீரை சாறோட வசம்புத்தூளைச் சேர்த்து குழந்தையோட தொப்புளைச்சுத்தி பத்து போட்டு வந்தா பிரச்சினை சரியாயிரும். குழந்தைங்க மட்டுமில்ல பெரியவங்களுக்கும் சிலநேரம் சிறுநீர் போகாம வயித்துல தேங்கி ரொம்ப பாடாப்படுத்தும். அந்தமாதிரி நேரங்கள்ல முருங்கைக்கீரையோட வெள்ளரி விதை சேர்த்து வெந்நீர் விட்டு அரைச்சி தொப்புள்ல பத்து போட்டா நீர்க்கட்டு உடைஞ்சி சிறுநீர் வெளியேறும். செலவே இல்லாத வைத்தியம்.


மலச்சிக்கல் வாதக்கோளாறுக்கு மருந்து


மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவங்க பகல் வேளை உணவோட முருங்கைக்கீரையை பொரியல் பண்ணி சாப்பிடலாம். இல்லன்னா சூப் செஞ்சி குடிக்கலாம். முருங்கைக்கீரைதான்னு இல்ல முருங்கை ஈர்க்குகளை ரசம், சூப் வச்சி குடிச்சிட்டு வந்தாலே மலச்சிக்கல் பிரச்சினைகள்ல இருந்து விடுபடலாம். வாரத்துல ஒருநாள் முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கல் பிரச்சினையில இருந்து விடுபடலாம். இன்னைக்கி சூழல்ல பலபேருக்கு இருக்கிற பிரச்சினைகள்ல மலச்சிக்கல் பிரச்சினை முக்கியமானது. வாதக்கோளாறு, மூட்டு வலி உள்ளவங்க முருங்கைக்கீரையோட வாதநாராயணன் கீரை, லெச்சக்கெட்ட கீரையையும் சேர்த்து சமைச்சி சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-


சர்க்கரை நோய் தடுக்கும்


குழந்தையின்மை, ஆண்மைக்குறை பிரச்சினை உள்ளவங்க முருங்கைக்கீரையை சமைச்சி சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். முருங்கைக்கீரை மட்டுமில்லாம முருங்கைப்பூவையும் சமைச்சி சாப்பிடலாம். முருங்கைப்பூவை பால்ல போட்டு வேக வச்சி சாப்பிட்டு வந்தா ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும். அதுமட்டுமில்லாம கண் கோளாறுகள், பித்தக்கோளாறுகள்ல இருந்தும் விடுபடலாம். முருங்கைக்கீரை சாப்பிடுறதால சர்க்கரையோட அளவைக் குறைச்சி சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் பிரச்சினை வராம தடுக்கும்.


வெந்து கெட்டது முருங்கை


இனிமேலாவது முருங்கைக்கீரையோட மகிமையை புரிஞ்சிக்கிட்டு அடிக்கடி சமைச்சி சாப்பிடுங்க. ஆனா முருங்கைக்கீரையை அதிகம் வேக வைக்காதீங்க. அப்பிடி செஞ்சா அதுல உள்ள சத்துகள் நமக்குக் கிடைக்காது. அதனாலதான் வெந்து கெட்டது முருங்கை, வேகாம கெட்டது அகத்தின்னு ஒரு மருத்துவ பழமொழி சொல்வாங்க. பழமொழியைப் புரிஞ்சிக்கோங்க. வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வைங்க. முருங்கையில அதோட கீரை மட்டுமில்லாம பூ, பட்டை, பிசின், ஈர்க்குன்னு எல்லாத்துக்கும் மருத்துவ குணம் இருக்கு.
-எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here