Home ஆன்மிகம் அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி புது வீடு என்று புதியதாக ஒரு சில விஷயங்களை வாங்கினால் அது மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. சூரிய பகவான் அவருடைய உச்ச ராசியான மேஷ ராசியிலும் சந்திரன் அவருடைய உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாளை அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.

-விளம்பரம்-

2024 அட்சய திருதியை

2024 வது வருடம் அட்சய திருதியை மே பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த வருட அட்சய திருதியை வெள்ளிக்கிழமை வருவதால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மே பத்தாம் தேதி காலை 4.17 மணிக்கு அட்சய திருதியை தொடங்கி மே பதினொன்றாம் தேதி 2.50 மணிக்கு முடியும். இந்த அச்சிகிருத்திகை என்று தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதோடு மட்டுமில்லாமல் வீட்டில் இன்னும் ஒரு சில விஷயங்களை செய்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் நடக்கும் அதில் ஒன்றுதான் நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லியை பார்ப்பது. அப்படி பல்லியை அன்றைய நாளில் பார்ப்பதால் நமக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும் என்று கருதப்படுகிறது.

அட்சய திருதியை அன்று பல்லியை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் பல்லிக்கு பஞ்சமே இருக்காது. ஒரு வீட்டில் பல்லி இருந்தால் தான் அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கும் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். அந்த வகையில் அட்சய திருதியை அன்று நம் வீட்டில் உள்ள பல்லியை பார்த்தால் நாம் ஏழு ஜென்மங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். ஒரு சிலர் இந்த வலியை கண்டாலே பயந்து ஓடுவார்கள் ஆனால் ஒரு சிலர் இந்த பல்லியை கடவுளாக நினைத்து வழிபடுவார்கள். அட்சய திருதியை அன்று நாம் பள்ளியை பார்த்தால் நம்மிடம் இருக்கும் அனைத்து பீடைகளும் நீங்கி செல்வ வளத்தையும் மகிழ்ச்சியையும் பெற்று நிம்மதியாக தெய்வத்துடைய அருளோடு லட்சுமி கடாட்சத்தோடு வாழலாம் என்பது நம்பிக்கை.

ஒளிந்து கொள்ளும் பல்லி

மற்ற அனைத்து நாட்களிலும் பல்லிகள் நம்மை சுற்றி சுற்றி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை என்று என்னதான் நம் வீட்டில் அதிக அளவில் பல்லிகள் இருந்தாலும் நம் கண்களுக்கு தெரியவே தெரியாதாம். அன்று மட்டும் நமக்கு தெரியாது இடங்களில் போய் ஒளிந்து கொள்ளுமாம். எனவே என்னதான் பல்லி நம்மிடம் விளையாட்டு காட்டினாலும் அட்சய திருதியை அன்று நம் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி எல்லா துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையையும் செல்வ வளத்தையும் பெறுவதற்கு எப்படியாவது பல்லியை அட்சய திருதியை அன்று பார்த்து விட வேண்டும்.

இதனையும் படியுங்கள் : 2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

-விளம்பரம்-