பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஓர் சிறந்த மருந்து பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ?

- Advertisement -

இன்றைய காலங்களில் ஆண்கள் என்னதான் வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும் அதைவிட ஒரு பெண்ணின் வாழ்க்கையை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு பருவத்திலும் அந்த பெண் சந்திக்கும் வலிகளும் துயரங்களும் அதிகம் அதை ஒரு பெண் தன் குழந்தை பருவம் முடிந்து வயது வரும் பருவத்தில் இருந்து சந்திக்க ஆரம்பிக்கிறாள். ஆம் வயதுக்கு வந்த பெண் அந்த மாதவிடாய் காலங்களில் அவள் படும் துயரங்கள் ஏராளமானவை அதிலும் இன்றைய காலகட்டங்களில் சிறுவயதிலேயே குழந்தைகள் வயதுக்கு வருகின்றன ஆடி, பாடி, துள்ளி விளையாட வேண்டிய காலத்தில் வயதுக்கு வந்து தன் குழந்தை பருவத்தையே இழந்து அவள் படும் துயரம் கொஞ்சம்ல்ல. அந்த மாதவிடாய் காலங்களில் அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் வலிகளை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை இருந்தாலும் இந்த மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் சிறந்த மருந்தை பற்றி இந்த உடல்நலம் குறித்த தொகுப்பில் நான் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

காலை உணவு

பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் காலை உணவுகளை தவிர்ப்பது சரியான செயல் இல்லை கண்டிப்பான முறையில் காலை உணவை உட்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களிலும் அதிகம் மசாலா சேர்த்த பொருட்கள் மற்றும் அதிக எண்ணெய் பலகார உணவுகளை தவிர்த்து விடுங்கள். என்னதான் வேலைகள் அதிகமாக இருந்தாலும், நேரமில்லை காரணமாகவும் காலையில் சாப்பாட்டை தவிர்க்காதீர்கள். காலையில் உணவை மட்டும் கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும் ஏனென்றால் உடலில் இரைப்பையில் இருக்கும் செரிமான உறுப்புகளுக்கு வேலை இல்லாத போது ஹார்மோன் உற்பத்திகள் பாதிக்கப்பட்டு நமக்கு மாதவிடாய் காலத்தில் நமக்கு வலிகள் ஏற்படுத்துவதற்கு முதல் காரணமாக இது அமைந்துள்ளது.

- Advertisement -

கடுக்காய்

நம் சித்த மருத்துவத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பல பொருட்கள் மருந்தாக பயன்படுத்தப்படும் ஆனால் அந்த மருந்துகளில் முதன்மையாக இருப்பது கடுக்காய். நம் மருத்துவத்தில் முக்கியமான பொருளாக பாரம்பரியமாக இந்த கடுக்காயை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக நம் கடுக்காய் உட்கொள்வதால் நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இந்த கடுக்காய் பெரிதும் உதவியாக இருக்கும். நம் நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்று கேட்டால் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடுக்காய் வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் கஷாயம் செய்து குடித்தால் நம் உடலுக்கு பல விதத்தில் நன்மை பயக்கும்.

மாதவிடாய்க்கு மருந்து

நாம் வாங்கி வைத்துள்ள கடுக்காயை கொட்டைகளை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் நாம் வைத்திருக்கும் கொட்டை நீக்கிய கடுக்காய் சேர்த்து ஆதனுடன் சிறிதளவு இலவங்கம் மற்றும் பட்டை போன்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கசாயம் தயார் செய்து மாதவிடாய் காலத்தில் தினமும் பருகி வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் மற்றும் உடம்பில் உள்ள நச்சுக்களையும் அகற்றி உடம்பை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும். நம் முன்னோர் கடுக்காயை தேவர்கள் உட்கொள்ளும் தேவாமிருதத்திற்கு இணையாக ஒப்பிட்டு கூறுவார்கள்.

கடுக்காயின் நன்மைகள்

மேலும் நாம் கடுக்காயை வைத்து கசாயம் செய்து குடிப்பதன் மூலம் பெண்களுக்கு உண்டா மாதவிடாய் காலத்தில் இருக்கும் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சீராகி நிம்மதியான ஒரு சூழ்நிலையை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும்

-விளம்பரம்-

நம் உடலில் காணப்படும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைப்பதற்கு பெரித உதவியாக இருக்கும்.

நாம் உண்ணும் உணவுகளால் வயிற்றில் ஏற்படும் செரிமான கோளாறுகளை நீக்கி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கடுக்காயை கசாயம் செய்து குடிப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடலுக்கு ஒரு பாதுகாப்புக்காக அரணாக அமையும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here