நரம்புச்சுருள் நோயை சரிசெய்யும் சித்த மருத்துவத்தின் எளிய மூலிகை சிகிச்சை!

- Advertisement -

வெரிக்கோஸ் வெயின்… இன்னைக்கி சூழல்ல இந்தப்பிரச்சினை நிறையபேருக்கு இருக்கு. இதை நரம்புச்சுருள் இல்லன்னா நரம்புச்சுருட்டை, விரிசுருள் சிரை நோய்னும்கூட சொல்வாங்க. இந்தப்பிரச்சினை மணிக்கணக்குல நின்னுக்கிட்டே வேலை செய்றவங்களுக்கு அதிகமா வரக்கூடிய ஒண்ணு. டீக்கடைகள்ல பாத்திருப்பீங்க…மணிக்கணக்குல ஒரே இடத்துல நின்னுக்கிட்டே வேலை செய்ற வேலைன்னா அது டீ மாஸ்டரோட வேலையாதான் இருக்கும். கொஞ்சம் நேரம்கூட உட்கார்ந்து எழுந்திரிக்க முடியாத அளவுக்கு நெரிசலான இடத்துல நின்னுட்டே வேலை செய்ய வேண்டியிருக்கும். அடுத்ததா சொல்லப்போனா மளிகைக்கடைக்காரர், செக்யூரிட்டி வேலை பார்க்கிறவர், பஸ் கண்டக்டர், ஆசிரியர்கள், டிராபிக் போலீஸ்னு அந்தப்பட்டியல் நீளும்.

-விளம்பரம்-

கெட்ட ரத்தம் தேக்கம்

இவங்கள்ல பலபேருக்கு வெரிக்கோஸ் வெயின் பிரச்சினை வரும். இந்த வரிசையில கர்ப்ப காலத்துல வயித்துல வரக்கூடிய அழுத்தம்கூட பெண்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சினையை உண்டாக்க வாய்ப்பு இருக்கு. ஆக, பெண்களுக்கும் இந்தப்பிரச்சினை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. பொதுவா ரத்த ஓட்டம் ஒழுங்கா நடக்குறதுக்கு பல உறுப்புகளோட உதவி தேவைப்படும். அப்போ கெட்ட ரத்தம், நல்ல ரத்தம்னு எல்லா ரத்தமும் இதயத்துக்கு போய்ட்டு திரும்பணும்கிறது உடலியக்க ஒழுங்குமுறை. அந்தமாதிரி சில நேரங்கள்ல கால்ல உள்ள கெட்ட ரத்தம் அந்த இடத்தைவிட்டு போக முடியாம அப்பிடியே தேங்கி நின்னுரும். அங்கங்க கெட்ட ரத்தம் தேங்கி நிக்கிறதால காலப்போக்குல அந்த இடத்துல புடைச்சிக்கிட்டு வீக்கத்தை உண்டாக்கும். இதுதான் வெரிக்கோஸ் வெயின்.

- Advertisement -

நரம்புகளில் முடிச்சு

கறுப்பும், பச்சையும் கலந்த நிறங்கள்ல உள்ள இந்த கெட்ட ரத்தத்தால பெரிய அளவுல வலி இருக்காது. அதனால அதோட பாதிப்பு பத்தி தெரியாமலே இருக்கும். ஆனாலும் சில நேரங்கள்ல குத்தலும், குடைச்சலுமா இருக்கும். தொடைப்பகுதிகள்லயும் கால் மூட்டுகளோட பின்புறத்துலயும் நரம்புகள்ல முடிச்சி விழுந்தது மாதிரி அங்கங்க புடைச்சிக்கிட்டு இருக்கும். இதைப்பார்த்துட்டு பலபேர் அதை பெருசா எடுத்துக்கிடுறது இல்லை. நரம்பு சுருண்டிருக்கு… அவ்வளவுதான்னு ரொம்ப அலட்சியமா இருப்பாங்க. ஆனா அது நாளடைவுல பெரிய பிரச்சினையை உண்டாக்குறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு. அதனால இந்தமாதிரி பிரச்சினை உள்ளவங்க அதை அலட்சியப்படுத்தாம அதை சரிபண்றது நல்லது.

கரியபோளம்

வெரிக்கோஸ் வெயின் பிரச்சினை உள்ளவங்களுக்கு மலச்சிக்கல் வந்தா ரத்த நாளங்கள் அழுத்தத்துக்குள்ளாகி நரம்பு சுருண்டு இருக்கிற இடத்துல புடைச்சிக்கிட்டு இருக்கும். பொதுவாவே மலச்சிக்கல்ங்கிறது எல்லோருக்குமே நல்லது இல்லை. முக்கியமா வெரிக்கோஸ் வெயின் பிரச்சினை உள்ளவங்க மலச்சிக்கல் வராம பார்த்துக்கிடுறது நல்லது. மத்தபடி வெரிக்கோஸ் வெயின் பிரச்சினையை சரிபண்றதுக்கு நிறைய வழிகள் இருக்கு. நாட்டு மருந்துக்கடைகள்ல கரியபோளம்னு கேட்டா கிடைக்கும். அதை ரத்தபோளம்னும் சொல்வாங்க. பிசின் வடிவத்துல இருக்கிற அந்தப்பொருளை கொஞ்சமா உடைச்சி ஒரு கரண்டியில வச்சி கொஞ்சமா தண்ணி ஊத்தி சூடாக்குனா இளகும். அதை பொறுக்குற சூட்டுல வெரிக்கோஸ் வெயின் உள்ள இடத்துல தடவிட்டு வந்தா காலப்போக்குல பலன் கிடைக்கும்.

மூலிகைப்பற்று

சீதேவி செங்கழுநீர்னு ஒரு மூலிகை இருக்கு. எல்லா இடங்கள்லயும் ரொம்ப சாதாரணமா வளர்ந்திருக்கும். இந்த மூலிகையில மூக்குத்தி மாதிரி பூ பூத்திருக்கும். அந்த இலையை அரைச்சி வீக்கம் உள்ள இடத்துல பற்று போட்டுட்டு வந்தா வீக்கமும், வலியும் சரியாகும். கருந்துளசி இலை கைப்பிடி அளவு எடுத்து அதோட மூணு துண்டு வசம்பு, கற்றாழை ஜெல் சேர்த்து அரைச்சி கொஞ்சமா மஞ்சள் சேர்த்து நரம்புச்சுருள் உள்ள இடத்துல தடவி நல்லா காய விடணும். இதை தொடர்ந்து ஒரு மாசம் செஞ்சிட்டு வந்தா வலியும், வீக்கமும் குறையும், நரம்புச்சுருள் பிரச்சினையும் சரியாயிரும். மண் குளியல் செய்றது, புற்றுமண்ணைப் பூசுறது, எண்ணெய் மசாஜ் பண்றதுன்னு பலவிதமான சிகிச்சைகள் இருக்கு. அதை விட்டுட்டு சிலபேர் வேற வேற வழிகளை தேடிப்போறாங்க. ரொம்ப சாதாரணமா இதை சரிபண்ணிடலாம்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here