காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஆனால் முட்டை பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்காக இந்த முட்டை பிரியாணி ரெசிபி.
தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்து விட்டது என்றால், அதிகம் சிரமப்படாமல், அதே சமயம் ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த செட்டிநாடு முட்டை பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு முட்டை பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். செட்டிநாடு ஸ்டைலில் எந்த உணவு செய்தாலும் வழக்கமாக சாப்பிடும் அளவை விட அன்றைக்கு அதிகமாகவே சாப்பிடுவோம். எனவே வீடே மணக்கும் அளவிற்கு செட்டிநாடு முட்டை பிரியாணி வைப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
செட்டிநாடு முட்டை பிரியாணி | Chettinadu Egg Biryani Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 2 கப் பாசுமதி அரிசி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 3 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
அரைக்க :
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 5 முந்திரி
- 3 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் கசகசா
- புதினா, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பச்சை மிளாகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் முட்டையை உடைத்து ஒரு பௌலில் சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதனை எடுத்து துண்டுகள் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, வெங்காயம், மல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து விடவும்.
- பின்னர் கட் செய்து வைத்துள்ள முட்டையை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான செட்டிநாடு முட்டை பிரியாணி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு மட்டன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!