உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் அற்புதமான மூலிகை விதை!

- Advertisement -

கொத்தமல்லி விதை… தனியான்னு சொன்னாதான் பலபேருக்குத் தெரியும். சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள்ல இந்த கொத்தமல்லி விதையும் ஒண்ணு. அஞ்சறைப்பெட்டியில இந்த கொத்தமல்லி விதைக்கு நிச்சயம் இடம் உண்டு. நாம சாப்பிடுற சாப்பாட்டுக்கு ருசியையும் வாசனையையும் தரக்கூடியது. அதே நேரத்துல பல நோய்களை குணப்படுத்துறதுக்கு இந்த கொத்தமல்லி விதை நல்ல மருந்து. வைட்டமின் சத்துகளும், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம்னு பல சத்துகளும் இதுல இருக்கு. செரிமானக்கோளாறை சரிபண்றதுல இருந்து காய்ச்சலைக் குணப்படுத்துறது, பித்த நோய்களைக் குறைக்கிறதுன்னு பல நோய்களை சரிபண்ணக்கூடியது இந்த தனியாங்கிற கொத்தமல்லி விதை.

-விளம்பரம்-

சுக்கு மல்லி காபி

கொத்தமல்லின்னு சொன்னா பலபேர் மல்லிக்கீரை… அதாவது மல்லித்தழையான்னு கேப்பாங்க. மல்லின்னு சொன்னாலே அது கொத்தமல்லி விதைதான். இது முக்கியமா பித்த நோய்களை சரிபண்ணும். சிலபேரைப் பார்த்து உனக்கு பித்தம் தலைக்கு ஏறிட்டான்னு கேப்பாங்க. பித்தம் தலைப்பகுதிக்குப் போனா அது வேற சில பிரச்சினைகளை உண்டாக்கும். அதனால பித்தத்தை உடனே சரிபண்றது நல்லது. கொத்தமல்லி விதை, பனங்கற்கண்டு, சுக்கு எல்லாத்தையும் சம அளவு எடுத்து தண்ணி விட்டு கொதிக்கவச்சி காலைல சாயங்காலம்னு குடிச்சிட்டு வந்தா பித்தம் இறங்கிரும். இல்லன்னா சுக்கு மல்லி காபி செஞ்சி குடிக்கலாம். இந்தப் பொருள்களோட கொஞ்சம் மிளகு சேர்த்தா சுக்கு மல்லி காபி, அவ்வளவுதான்.

- Advertisement -

பித்த கிறுகிறுப்பு

பித்த கிறுகிறுப்புக்கும் கொத்தமல்லி விதை ரொம்ப நல்லது. அதாவது பித்தம் அதிகமானா தலையை சுத்திட்டு கிறுகிறுன்னு வரும். அந்த மாதிரி நேரங்கள்ல ஒரு பாத்திரத்துல கொத்தமல்லி விதையை லேசா நசுக்கிப் போட்டு தண்ணி ஊத்தி நல்லா கொதிக்க வைக்கணும். கொதிச்சதும் அடுப்புல இருந்து இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் குடிச்சா பித்தக்கோளாறு சரியாயிரும். தேவைப்பட்டா பால் சேர்த்துக்கிடலாம். தொடர்ந்து இதே மாதிரி 21 நாள் குடிச்சிட்டு வந்தா பித்த கிறுகிறுப்பு விலகிப்போயிரும். அதுமட்டுமில்ல பித்தத்தால வரக்கூடிய வேறு சில பாதிப்புகளும்கூட இருக்கு. அதையெல்லாம் சரி பண்றதுக்கு இந்த கொத்தமல்லி விதை நல்ல மருந்து.

போதை தணிய வைக்கும்

மது போதையைக் குறைக்கிறதுக்குக்கூட இந்த தனியாங்கிற கொத்தமல்லி விதை ரொம்ப நல்லது. சில பேர் அளவுக்கு அதிகமாக குடிச்சிட்டு போதை இறங்காம ரொம்ப கஷ்டப்படுவாங்க. அது மட்டுமில்லாம குடிக்கு அடிமையானவங்களை அதுல இருந்து மீட்கிறதுக்கும் இந்த கொத்தமல்லி விதை உதவும். எப்படின்னா… வெறும் கொத்தமல்லி விதையை தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிச்சிட்டு வந்தாலே போதும். கொஞ்சம் கொஞ்சமா போதை இறங்கிரும். இந்தமாதிரி போதை இறங்கிறதால போதை ஆசாமிகளுக்கு இந்த கொத்தமல்லி விதை கசாயத்தை தெரிஞ்சோ தெரியாமலோ கொடுத்துட்டு வந்தா அவங்களுக்கு போதை மேல உள்ள ஆசை குறைஞ்சு போயிரும்.

காய்ச்சல் நாக்குச்சுவையின்மை

காய்ச்சல் நேரத்துல கொத்தமல்லி விதையை துவையல் செஞ்சு கொடுத்துட்டு வந்தா அற்புதமா வேலை செய்யும். எப்படின்னா காய்ச்சல் நேரத்துல நாக்குல ருசி இல்லாம இருக்கும். அந்த மாதிரி நேரங்கள்ல சாப்பாடு செரிமானமாகாது. அப்போ கொத்தமல்லி விதையை வறுத்து அதோட புளி, மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து அரைச்சி துவையல் செஞ்சி சாப்பிட்டு வந்தா சாப்பாடு செரிமானமாகும். அதே மாதிரி காய்ச்சலோட தீவிரமும் குறையும். நாக்கு சுவை இல்லாம இருக்கிற பிரச்சினையும் சரியாகும். சில பேருக்கு சாப்பிட்ட சாப்பாடு செரிமானமாக வயிற்றுப்போக்கு வரும். அதுக்கும் இதே மாதிரி துவையல் செஞ்சு கொடுக்கலாம். இல்லன்னா கொத்தமல்லி விதையோட தண்ணி விட்டு கொதிக்க வச்சி பால் சேர்த்து குடிக்கலாம்.

-விளம்பரம்-

நச்சுக்களை வெளியேற்றும்

இதயம் பலவீனமா உள்ளவங்க, அதிகமா தண்ணி தாகம் உள்ளவங்களுக்கும்கூட இந்த கொத்தமல்லி விதை நல்லது. ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக இருக்கிறதால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே மாதிரி இதுல உள்ள வைட்டமின் சி நச்சுக்களை வெளியேற்றும். சீரகத் தண்ணீர் மாதிரி கொத்தமல்லி விதையிலயும் தண்ணி செஞ்சி குடிக்கலாம். ஆனா இதை கொதிக்க வைக்க வேண்டாம். ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி தனியாவை தண்ணி சேர்த்து ஊற வச்சி காலையில எழுந்து குடிச்சிட்டு வந்தா போதும். நிறைய பிரச்சினைகள் சரியாகும்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

கொத்தமல்லி விதையில இரும்புச் சத்து நிறைய இருக்கு. அதனால எல்லோருமே தாராளமா சாப்பிடலாம். முகத்துல பரு, தழும்பு பிரச்சினைகள் இருந்தா அதை சரிபண்றதுக்கு இது உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கும்கூட நல்லது தான். அதனால சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டு வந்தா சர்க்கரை அளவு அதிகரிக்காம பாத்துக்கிடலாம். கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைச்சு நல்ல கொலஸ்ட்ராலோட அளவை அதிகரிக்க கொத்தமல்லி விதை நல்லது. ஆஸ்டியோபோரோசிஸ்னு சொல்லக்கூடிய எலும்பு பாதிப்புகள், ஆர்த்ரைடிஸ், ரத்தசோகைன்னு பல பிரச்சினைகளை சரிபண்ணும்.

கண் அலர்ஜி போக்கும்

கண்ணைச் சுத்தி அலர்ஜி வந்து பாடாய்ப்படுத்துனா கொத்தமல்லி விதைகளை தண்ணி ஊத்தி கொதிக்க வச்சி கண்களைக் கழுவுனா சரியாயிரும். இந்தமாதிரி பல பிரச்சினைகளை சரிபண்ணக்கூடிய இந்த தனியாங்கிற கொத்தமல்லி விதையை ஒரு மருந்தா பயன்படுத்துனா நிறைய பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here