பெரிய பெரிய பணக்காரர்கள் பணம் சேர யாருக்கும் தெரியாமல் செய்யும் இரகசிய பரிகாரம்!

- Advertisement -

பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர வித்தை கடைசிவரை தெரியாமலேயே போகின்றது. ஒரு ரூபாயைக் கூட எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளாதவர்கள் கையில் கூட, பணம் சேரும். வருமானம் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் தானாக தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு கூட, தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக லாபத்தை பெற முடியும். அதற்கான ஒரு தாந்திரீக சூட்சம மூன்று பரிகார முறைகளைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ஏலக்காய்

ஏலக்காய் மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக கருதப்படுகிறது. இதனை பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்துவதை விட பரிகாரத்துக்கு பயன்படுத்துவது தான் அதிகம். இந்தப் பிரச்சனை தீரவே தீராது! என்று உதறி விட்ட, பிரச்சனைகளை கூட சுலபமான முறையில் தீர்த்துக் கொள்ள இந்த ‌ஏலக்காய் உதவுகிறது. ஏலக்காய் வாசனை மிகுந்த பொருள். இப்படிப்பட்ட வாசனை மிகுந்த ஏலக்காயை நாம் பரிகாரத்திற்காக பயன்படுத்தும் போது நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

- Advertisement -

வீட்டில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு மூன்று ஏலக்காய் மற்றும் சிகப்பு துணி மட்டும் தான் தேவை. மூன்று ஏலக்காயை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்து நன்றாக மூடிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கு தீபத்தை ஏற்றி வடக்கு பக்கமாக அமர்ந்து “ஓம் ஸ் ரீம் ஸ்ரிமை நமஹா” என்ற மகாலட்சுமியின் மந்திரத்தை கூறிவிட்டு, உங்கள் உள்ளங்கையில் இருக்கும் ஏலக்காயை சிகப்பு துணியில் வைத்து விடுங்கள். பின்‌ இதனை ஒரு சிகப்பு நூல் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டில் யார் கண்ணுக்கும் தெரியாதவாறு எங்காவது மறைத்து வைத்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை இந்த நாளில் தான் செய்ய வேண்டும் என எந்த கணக்கும் இல்லை. உங்களுக்கு எப்பொழுது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது செய்யலாம். நீங்கள் கட்டி வைத்திருக்கும் முடிச்சை 21 நாட்களுக்கு பிறகு தண்ணீரிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ளும் பொழுது நமது வீட்டில் எந்த பிரச்சினைகள் இருந்தாலும் அது உடனே நீங்கிவிடும்.

தீராக் கஷ்டங்கள் தீர

உங்களுடைய வாழ்க்கையில் தீரா கஷ்டங்கள் இருந்தால் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. ஏனென்றால், விக்ணங்களை தீர்ப்பவர்தான் விக்ன விநாயகர். உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகருக்கு நெய்வேதியமாக இரண்டு ஏலக்காய்களை வைத்து வழிபட்டு வந்தால் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் வந்த வழி தெரியாமல் போய்விடும். இது மிகவும் எளிய பரிகாரமாக உள்ளது இதை செய்தால் எனது கஷ்டங்களும் தீர்ந்து விடுமா? என்ற சந்தேகத்துடன் இதனை செய்யாதீர்கள். இத பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் உங்களுக்கு வந்த கஷ்டம் எப்படி போனது என்று தெரியாமலே போய்விடும்.

-விளம்பரம்-

தீர்க்க முடியாத கடன் பிரச்சனையும் தீர

இந்த பரிகாரத்தை விநாயகரை நினைத்து திங்கட்கிழமையில் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்யும் திங்கட்கிழமையன்று அசைவம் உண்ணாதிருந்து வீடு மற்றும் பூஜை அறை அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகருக்கு நெய்வேதியமாக எதையாவது படைத்து விளக்கு ஏற்றி உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டாலே போதும். குறிப்பாக உலர் திராட்சைகள், பாதாம், முந்திரி, கற்கண்டு போன்றவற்றை நெய்வேதியமாக படைத்தால் விநாயகர் மனமகிழ்ந்து உங்களுக்கு வேண்டிய யாவையும் செய்து கொடுப்பார்.

இதனையும் படியுங்கள் : பர்சில் பணம் நிரம்பி வழிய இந்த ஒரு பொருளை பர்சில் வையுங்கள் போதும்! பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!