தீராத கடன் தொல்லை தீர உங்களிடம் ஒரு கைப்பிடி கொள்ளு இருந்தால் போதும்! இப்படி மட்டும் செய்து பாருங்க கடன் குறையும்!

- Advertisement -

எல்லோரும் எல்லா காலத்ததிலும் வசதியாக வாழ மாட்டார்கள். ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, வரவை விட செலவு அதிகமாகி கொண்டே வருகிறது, கொஞ்சம் கூட பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. ஏற்கனவே பணப்பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில், தேவையில்லாத வீண் விரயம் ஏற்படும். இதனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் வெளியிலிருந்து கடன் வாங்கும் சூழல் ஏற்படும். இது குடும்பத்தின் நிதி நிலையை மேலும் மோசமாக்கும். ஆனால் பணத்தை இரட்டிப்பாக்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

-விளம்பரம்-

சில குடும்பங்கள் எந்த முன்னேற்றத்தையும் அடையாமல் வறுமையில் வாடிக் கொண்டிருப்பார்கள். நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் கஷ்டங்களை கொடுத்து விடும். கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர். அதில் ஒன்றை இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

கடன் தீர கொள்ளு தானம்

உங்களுடைய கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தானியம் கொள்ளு. கொள்ளு கேதுவிற்கு உரிய தானியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவருடைய ஜாதக கட்டத்தில் கேதுவினால் பிரச்சனைகள் இருந்தாலும், கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும். இந்த கொள்ளு தானியத்தை தானம் செய்தால் எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் கை நிறைய ஒரு கைப்பிடி அளவு கொள்ளு தானியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதை உங்கள் கடனெல்லாம் தீர்ந்து போக வேண்டும் என்று வேண்டி இந்த தானியத்தை கோமாதாவிற்கு தானமாக கொடுத்து விடுங்கள். இதனால் பசுவின் ஆசிர்வாதம் மனப்பூர்வமாக உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கையால் கொள்ளை எவ்வளவு பசு மாட்டிற்கு கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு கடன் தீர்ந்து செல்வ செழிப்பு உங்களுக்கு கூடிக்கொண்டே செல்லும். இந்த தானத்தை ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்தில் செய்தால் கடுமையான கடனும் தீரும். இந்த தானத்தை தொடர்ந்து 16 நாட்கள் செய்து வர வேண்டும். இதை ஒரு நாள் தவற விட்டாலும் மறுபடியும் முதலில் இருந்து செய்ய வேண்டும்.

அதேபோல பாசிப்பருப்பை வாங்கி தானமாக கொடுக்கலாம். புதன்கிழமை அன்று பாசிப்பருப்பு வாங்கி கோவிலில் குருக்களுக்கு தானம் கொடுக்கலாம். ஆதரவற்றவர்கள் வாழும் ஆசிரமங்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழை குடும்பத்திற்கு ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்கி தானம் கொடுக்கலாம். அதை அவர்கள் சமைத்து சாப்பிட்டால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும்.

-விளம்பரம்-

கடன் தீர எத்தனையோ வகை பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரம் அதிலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதனால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் ஈடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

இதனையும் படியுங்கள் : துளியும் கடன், கடன் தொல்லை இல்லாமல் இருக்க இந்த 1 செடி வீட்டில் இருந்தால் மட்டும் போதும்!