கனவன் மனைவி சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையுடன் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

குடும்பத்தில் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது முக்கியமாக தம்பதிகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது அது அந்த குடும்பத்தில் உள்ள சூழ்நிலையை பாதிக்கும். அது மட்டுமல்லாமல் அவர்களை முன்மாதிரியாக கொண்டு வாழ வேண்டிய குழந்தைகள் கூட இச்சூழல் மிகவும் பாதிப்பை உண்டாக்கும்.

-விளம்பரம்-

பிரச்சனைகள் நீங்கி காதலுடன் வாழ்வதற்கு ஒரு சில பரிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்றான மிளகு உப்பு பரிகாரம் பற்றியும் அதனை முறைப்படி எப்படி செய்வது என்பதனை பற்றியும் இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

ஒற்றுமையை அதிகரிக்கும் சூட்சும பரிகாரம்:

எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையும் தீர்ப்பதில் உப்பு மிளகு பரிகாரத்திற்கு தனி இடம் உண்டு. இந்த உப்பு மிளகினை கொண்டு நாம் ஒருவரை வசியப்படுத்தி விட முடியும் அதாவது ஒருவரை நம் மீது அன்பு காட்ட வைக்க நம்மால் முடியும். இப்பரிகாரத்தை குறிப்பிட்ட நாளில் தான் செய்ய வேண்டும் என்பது ஒன்றுமில்லை. நம் விருப்பத்திற்கு ஏற்ப நமக்கு எப்பொழுது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது செய்துவிடலாம். இதை செய்யும் பொழுது நாள், நட்சத்திரம் என்று எதையும் நாம் பார்க்க வேண்டியதில்லை.

பரிகாரம் செய்யும் முறை :

சுத்தமாக நீராடி, பூஜை அறையில் ஒரு கண்ணாடி குவளையை எடுத்து சென்று அமைதியா அமர வேண்டும். அதில் முக்கால் அளவிற்கு தண்ணீரை நிறைத்துக்கொள்ளவும். பின்னர் 27 மிளகும் 27 கல் உப்பும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின் ஒவ்வொறு உப்பையும் மிளகையும் மாறி மாறி அந்த தண்ணீர் நிரப்பி இருக்கும் குவளையில் போட வேண்டும்.

இதனையும் படியுங்கள் : ஒன்னுமில்லாத வெறும் பர்ஸ்சில் கட்டு கட்டாக பணம் சேர! வெறும் ஒரு பிரியாணி இலை இருந்தால் போதும்!

-விளம்பரம்-

நானும் என் கணவரும் வழமைப்போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும். சண்டை என்பது நம் வாழ்வில் வரக்கூடாது என்று உங்களுக்கு தேவையானவையை வேண்டி இதை செய்ய வேண்டும். இறுதியாக அனைத்தையும் போட்டு முடிந்தவுடன் ஓடும் நீரில் அதை கொட்டிவிட வேண்டும். நீர் நிலைகள் இல்லையென்றால் கால பாடாத ஒரு இடத்தில் ஊற்றலாம்.

இந்த உப்பு மிளகு பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதனை உடனே உங்கள் வீட்டில் செய்து உங்கள் துணையுடன் சந்தோஷமாக வாழுங்கள்.