Home ஆன்மிகம் இந்த ஜென்மத்திற்கே கடன் பிரச்சினை வராமல் இருக்க இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் மட்டும் ...

இந்த ஜென்மத்திற்கே கடன் பிரச்சினை வராமல் இருக்க இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக இந்த உலகத்தில் யாராலும் கடன் வாங்காமல் இருக்கவே முடியாது. அப்படி கடன் வாங்கிவிட்டு நம்மால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் நம் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும். கடன் கொடுத்தவர்களும் நம் வீட்டிற்கு வந்து கடனை கேட்கும் பொழுது நமக்கு மிகவும் அசிங்கமாக இருக்கும். அப்படி கடன் பிரச்சினைகள் தலை விரித்து ஆடும் பொழுது நாம் தெய்வத்தை மட்டுமே நம்பி நம் பிரச்சினைகளை ஒப்படைக்க வேண்டும். அப்படி நாம் வழிபட வேண்டிய தெய்வம் என்றால் மகாலட்சுமி தாயார் தான்.

-விளம்பரம்-

மகாலஷ்மி தாயார் பணத்திற்கு சொந்தக்காரி எனவே மகாலட்சுமி தேவியை நாம் வணங்குவதினால் நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும். நம்முடைய கடன் பிரச்சினைகளை முழுவதுமாக தீர்க்க கூடிய இரண்டு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். அந்த இரண்டு பரிகாரத்திற்குமே நமக்கு தேவையானது மல்லிகை பூ. மல்லிகை பூ வைத்த இந்த இரண்டு பரிகாரங்களையும் நாம் செய்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த இரண்டு பரிகாரங்களில் ஏதாவது ஒரு பரிகாரத்தையோ அல்லது இரண்டு பரிகாரங்களையும் நாம் செய்யலாம்.

தேன் மல்லிகை பூ பரிகாரம்

முதலில் நம் உடைய வீட்டு பூஜை அறையை எப்பொழுதுமே மங்களகரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு விளக்கு ஏற்றி பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் பூ வைத்த பூஜை செய்ய வேண்டும். இந்த தேன் மல்லிகை பூ பரிகாரத்திற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் தேன் ஊற்றி அதில் இரண்டு மல்லிகை பூக்களை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தீபாராதனை காட்டி மகாலட்சுமி தாயாரை நினைத்து கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டும். நன்றாக வழிபாடு செய்து முடித்தவுடன் தேன் வைத்துள்ள அந்த கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உதிரி உதிரியாக நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு பிசைந்து வைத்துள்ள அந்த தேன் அரிசி மாவை உங்கள் வீட்டு அருகில் உள்ள மரம் செடிகளுக்கு அடியில் போட்டு விட வேண்டும். நாம் போட்ட அந்த தேன் கலந்த அரிசி மாவை எறும்புகள் சாப்பிட சாப்பிட நம்முடைய கடன் பிரச்சனைகளும் தீர்ந்து கொண்டே இருக்கும். இந்த பரிகாரத்திற்கு தேன் மிகவும் அவசியம் அதிலும் சுத்தமான தேனாக இருந்தால் மிகவும் நல்லது. மல்லிகை பூ கிடைக்கவில்லை என்றால் அதை மட்டும் விட்டு விடலாம் ஆனால் தேன் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வர பத்து பதினைந்து நாட்களிலேயே நமக்கு கடன் பிரச்சினைகள் குறைய தொடங்கும்.

விரலி மஞ்சள் மல்லிகைப்பூ பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் துர்க்கை அம்மனையும் நம்முடைய குலதெய்வத்தையும் நினைத்துக் கொண்டுதான் செய்ய வேண்டும். முதலில் இந்த பரிகாரத்திற்கு மல்லிகை பூக்கள் அதிகமாக தேவைப்படும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை காலையில் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி கொள்ளவும். பிறகு ஒரு சிறிய தட்டில் மல்லிகை பூக்களை போட்டு பரப்பிக் கொள்ளவும். அந்த மல்லிகை பூக்களுக்கு நடுவில் ஒரு அகல் விளக்கு வைத்து விளக்கு ஏற்றிக் கொள்ளவும். மல்லிகை பூக்களில் ஒரு விரலி மஞ்சள் வைத்து அதில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது துர்க்கை அம்மனையும் குலதெய்வத்தையும் நினைத்து கடன் பிரச்சினைகள் யாவும் தீர வேண்டும் என்று சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த விரலி மஞ்சள் மிகவும் பழையதாக மாறிவிட்டால் அதனை மாற்றி வேறொரு விரலி மஞ்சளை வைத்து வழிபடலாம்.இவ்வாறு செவ்வாய்க்கிழமை செய்து வர உங்கள் கடன் பிரச்சினைகள் தீர தொடங்கும்.

பொதுவாக நாம் கடன் வாங்கும் பொழுது செவ்வாய்க்கிழமையும் சனிக்கிழமையும் வாங்க கூடாது. ஏனென்றால் அந்த நாட்களில் வாங்கினால் கடன் பெருக தான் செய்யும். எனவே அந்த நாட்களில் கடன் வாங்க கூடாது. கடனை திருப்பிக் கொடுக்கும் பொழுது செவ்வாய் கிழமையிலும் சனிக்கிழமைகளும் கொடுக்கலாம் செவ்வாய் ஓரையில் கொடுத்தால் கடனை திருப்பி வாங்க வேண்டிய அவசியமே வராது. கடன் பிரச்சினைகள் யாவும் தீர்ந்து பண வரவும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கடன் தீர்ந்து வீட்டில் பணம் சேர தை அம்மாவாசை அன்று நாம் செய்ய‌ வேண்டிய முக்கியமான விஷயங்கள்!