Home ஆன்மிகம் உங்கள் முழு கடனும் அடை நீங்கள் கொடுத்த பணம் திரும்ப உங்களிடமே வர கையில் கொஞ்ச...

உங்கள் முழு கடனும் அடை நீங்கள் கொடுத்த பணம் திரும்ப உங்களிடமே வர கையில் கொஞ்ச கருப்பு எள் இருந்தால் போதும்..!

இன்றைய காலக்கட்டத்தில் பணம் தொடர்பான பிரச்சனைகள் தான் பெருமளவில் பெருக்கிக் கொண்டே இருக்கிறது. ஒன்று பணம் சம்பாதிக்க பாடுபட வேண்டும். அடுத்து சம்பாதித்த பணம் கையில் தங்க போராட வேண்டும். இந்த நிலையில் இவற்றை சரி செய்ய கடன் வாங்கி துன்பப்பட வேண்டியது இருக்கும். சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். இவை அனைத்திலும் விட கொடுமையானது பணத்தை நம்பி கொடுத்த பிறகு அவர்களிடம் இருந்து திரும்பி வாங்க படும் பாடு.

-விளம்பரம்-

ஒருவரை நம்பி கொடுத்த பணம் வருடக் கணக்கில் திரும்பி வராமல் இருக்கும். பணத்தை திருப்பி தர சொல்லி கேட்டு நீங்கள் சலித்து போய் இருப்பீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து கடனாக கொடுத்தப் பணத்தை மீண்டும் எப்போதாவது பார்க்க முடியுமா என்று நீங்கள் யோசிக்கும்போது விரக்தியும் கவலையும் உருவாக்குகிறது. இப்படி பணம் திரும்பி வராமல் வருடக்கணக்கில் இழுப்பறிப்பதால் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கும். என்ன செய்தும் நம்முடைய பணம், நகை, சொத்து திரும்ப கிடைக்கவில்லையே என வேதனை படுபவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வீட்டிலேயே எளிமையான பரிகாரம் செய்வதைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்

பொதுவாக வீட்டின் தெற்கு திசை மிகவும் முக்கியமான திசையாகும். ஏனெனில் தெற்கு திசை தான் செவ்வாய்க்கு உரிய திசையாகும். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் துவங்கலாம். அதே போல் இந்த காலை மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் எளிதாக கிடைக்கின்ற மூன்று பொருட்களை தான் பயன்படுத்த போகின்றோம். அதாவது கடுகு எண்ணெய், கருப்பு எள் மற்றும் சோழி. முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் கடுகு எண்ணெய் ஊற்றி அதில் ஒரு சோழியை போட வேண்டும். இதனுடன் கருப்பு எள்ளையும் சேர்த்து பரிகாரம் செய்வதற்கான முதல் நாள் இரவு ஊற‌ வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுத்த நாள் ஒரு அகல் விளக்கை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, நாம் வைத்திருந்த எண்ணெயை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து போட்டு வீட்டில் பூஜை அறையில் அல்லது ஏதேனும் ஒரு அறையில் தெற்கு நோக்கி எரியும் படி ஏற்றி வைத்து, நீங்கள் ஏமாந்த பணம் திரும்பி கிடைக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும்.

இவ்வாறு தினந்தோறும் விளக்கேற்றி வழிபட்டால், நீங்கள் ஏமாந்த அல்லது கடனாக கொடுத்த பணம் அனைத்தும் திரும்ப கிடைக்கும். இந்த தீபம் குறைந்தது 20 நிமிடங்களாவது எரிய வைக்க வேண்டும். செவ்வாய் கிழமையில் காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக இந்த தீப பரிகாரத்தை செய்வது மிகவும் விசேஷமானதாகும். தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரையும், குலதெய்வத்தையும் வேண்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம்‌ இந்த பரிகாரத்திற்கு மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருளாக கருதப்படுகிற கடுகு எண்ணெய் மற்றும் சோழியை பயன்படுத்துகிறோம். இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வருவது சிறப்பான பலனை கொடுக்கும்.

-விளம்பரம்-

இந்த பரிகாரம் மிகவும் எளிமையான பரிகாரங்களில் ஒன்று. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து இழந்த பணம் மற்றும் வாங்கிய கடன் இந்த இரண்டு பிரச்சனைகளில் இருந்து எளிதில் வெளி வந்து நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள்.

இதனையும் படியுங்கள் : கடன் தொல்லைகள் நீங்கி வருமானம் பெருக வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போது!