கடன் தொல்லையிலிருந்து விடுபட நாளை ஜனவரி 1 ஆம் தேதி இதை மட்டும் செய்ய மட்டும் செய்து விடுங்கள் போதும்!

- Advertisement -

இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றுதான் பணம். அந்த பணத்தை சம்பாதிக்க அனைவரும் பல விதங்களில் கஷ்டப்படுகின்றனர். அப்படியே கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் நமக்கு வரவுக்கு மேல் செலவு தான் வரும். அதனால் பல சூழ்நிலைகளில் நாம் கடன் வாங்குகிறோம் அந்த கடனை அடைக்க முடியாமல் மிகவும் கஷ்டமும் படுகிறோம். எனவே இந்த கடன் தொல்லையில் இருந்து விடுபட 2024 பிறக்கின்ற முதல் நாள் அன்று நாம் இந்த வழிபாட்டை செய்தால் நாம் விரைவிலேயே கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

-விளம்பரம்-

2024 ஜனவரி ஒன்றாம் தேதி மார்கழி 16ஆம் நாள் பிறக்கிறது. பொதுவாக மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யும் பிரம்ம முகூர்த்த பூஜை ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனது அன்று நாம் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -

வழிபடும் முறை

மார்கழி மாதம் 16ஆம் நாள் பிறக்கின்ற ஜனவரி ஒன்றாம் தேதி பிரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 4 மணியில் இருந்து ஆறு மணிக்குள் பூஜை அறையில் தெய்வங்களுக்கு வாசனை மலர்களால் அலங்காரம் செய்து நெய் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையை ஆண் பெண் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பூஜை செய்யும் போது நெய்வேத்தியமாக பால் சர்க்கரை அல்லது சர்க்கரை பொங்கல் என எது வேண்டுமானாலும் வைக்கலாம். இனிப்பு சார்ந்த உணவுப் பொருட்களை நெய்வேத்தியமாக வைத்தால் மிகவும் சிறப்பு. அப்படி வீட்டில் இனிப்புகள் செய்ய முடியவில்லை என்றால் கடைகளில் இருந்து கூட வாங்கி வைக்கலாம்.

கடன் தொல்லையில் இருந்து விடுபட செய்ய வேண்டிய முடிச்சு வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே. இதற்கு பூஜை அறையில் தரையில் ஏதாவது ஒரு துணியோ அல்லது மரப்பலகை வைத்து அதில் அமர்ந்து கொள்ள வேண்டும். தருகில் அமர்ந்து இந்த வழிபாட்டை செய்யக்கூடாது. கண்டிப்பாக துணியில் அல்லது மரப்பலகையிலோ தான் உட்கார வேண்டும். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கட்ட வேண்டும்.

அப்படி கட்டும் பொழுது இந்த 2024 உங்களுக்கு எந்தெந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாக வேண்டுமோ என்னென்ன விஷயங்கள் எல்லாம் கிடைக்க வேண்டுமோ அதை எல்லாம் மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டே அந்த முடிச்சை கட்ட வேண்டும். அப்படி அந்த முடிச்சை கட்டும் பொழுது உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிச்சை உங்கள் வீட்டில் குலதெய்வ படம் இருந்தால் அதற்கு முன்னர் வைக்க வேண்டும். ஒருவேளை குலதெய்வப்படம் இல்லை என்றால் விநாயகர் படத்திற்கு முன்பாக அந்த முடிச்சை வைத்து விட வேண்டும். வருடத்தின் முதல் நாளன்று நீங்கள் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதோடு செல்வ செழிப்போடும் வாழலாம்.

-விளம்பரம்-

இந்த முடிச்சை உங்கள் குலதெய்வ கோவிலுக்கு போகும் போது அங்கே வைத்து விட்டு வரலாம். இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சங்கடஹர சதுர்த்தி என்று சென்று இந்த முடிச்சை வைத்து விட்டு வரலாம். இந்த எளிமையான வழிபாடு உங்களை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றும். இதை ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும். வருடத்தின் முதல் நாள் என்று யாரிடமும் இருந்து கடன் வாங்குவோம் அல்லது நீங்கள் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. நம்பிக்கையோடு இந்த எளிமையான வழிபாட்டை புது வருடத்தன்று செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இதனலயும் படியுங்கள் : உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உங்களிடம் சிறிது கல் உப்பு இருந்தால் போதும்!